இந்தியா அதிகளவில் கச்சா எண்ணெய்யை ஈரானில் இருந்து இறக்குமதி செய்து வரும் நிலையில் ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடையால் பண பரிவர்த்தனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதில் உள்ள சிக்கலை தீர்க்க வேண்டும் என்பதால் ரூபாய் மதிப்பில் ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்கலாமா என்று அரசு விவாதித்து வருகிறது.
அணு ஆய்த ஒப்பந்தம்
ஈரான் உடனான அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிய டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு அவர்கள் மீது பொருளாதாரத் தடை விதித்துள்ளது. இதனால் இந்தியாவில் ஈரானிடம் இருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய்யினை வாங்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
பொருளாதாரத் தடை
அமெரிக்கா ஈரான் மீது விதித்துள்ள சில தடைகள் வர இருக்கும் ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ள நிலையில் கச்சா எண்ணெய் மீதான இறக்குமதிகளுக்கு நவம்பர் 4-ம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கிறது.
கிரெடிட்
ஈரான் இந்தியாவிற்கு 90 நாட்கள் கிரெடிட் அடிப்படையில் கச்சா எண்ணெய் வழங்கி வரும் நிலையில் ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு வாங்கும் போது டாலர் மதிப்பில் பணத்தினைச் செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
ரூபாய்
இதற்கான தீர்வுகள் குறித்து ஈரான் மற்றும் இந்திய அரசு தரப்பு விவாதித்து வரும் நிலையில் ரூபாய் மதிப்பில் பரிவர்த்தனை செய்யலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் அரசு தரப்பு வட்டாரங்களில் இருந்து தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
எஸ்பிஐ
இந்தியன் ஆயில் நிறுவனம் ஈரானில் இருந்து அதிகளவில் கச்சா எண்ணெய்யினை இறக்குமதி செய்து வரும் நிலையில் எஸ்பிஐ வங்கி உதவியுடன் தான் பரிவர்தனை செய்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்க விதித்துள்ள பொருளாதாரத் தடையால் நவம்பர் மாதத்திற்குப் பிறகு ஈரான் எண்ணெய் நிறுவனங்களுக்குப் பரிவர்த்தனை செய்ய முடியாது என்று எஸ்பிஐ தெரிவித்துள்ளது.
More From GoodReturns

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போர்: பல ஆயிரம் கோடிகளை இழந்த இந்திய விமான நிறுவனங்கள்!! நிலைமை இன்னும் மோசமடையுமா?

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

இதை தான் ஒரு வாரமாக அட்டாக் பண்றாங்களா? ஈரான் போரில் நடப்பது என்ன? அமெரிக்கா, இஸ்ரேல் சொல்வது பொய்யா?

துபாய், சவுதி வாழ் இந்தியர்களுக்கு மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!! இந்த நம்பரை சேவ் பண்ணிக்கோங்க!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

கத்தார் வாழ் இந்தியர்களே கவனம்!! வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என எச்சரிக்கை!! #Iranwar

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்கிறதா? கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு மத்தியில் முக்கிய அப்டேட்

படுகொலை செய்யப்பட்ட ஈரான் தலைவர் கமேனியின் இறுதி ஊர்வலம் ஒத்தி வைப்பு: காரணம் என்ன?

ஈரான் போர் நீடிப்பதால் மனம் மாறிய அமெரிக்கா!! திடீரென இந்தியாவுக்கு சலுகை!!

ஈரான் போர்: வான்வெளியில் மட்டுமல்ல நீருக்கடியிலும் தாக்குதல் நடத்தும் அமெரிக்கா!!



Click it and Unblock the Notifications