நாட்டின் முன்னணி பெயிண்ட் தயாரிப்பு நிறுவனமான ஏசியன் பெயிண்ட்ஸ் தனது உற்பத்தியை அதிகரிக்கும் காரணத்திற்காக தனது விசாகப்பட்டினம் மற்றும் மைசூர் உற்பத்தி தளத்தில் மூலம் 11 லட்சம் கிலோ டன் உற்பத்தி அளவை அதிகரிக்க சுமார் 4000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.
இந்நிலையில் ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம் தற்போது 1,785 கோடி ரூபாய் முதலீட்டில் வருடத்தில் 5 லட்சம் கிலோ டன் அளவிற்கு உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை விசாகப்பட்டினத்தில் துவங்க உள்ளது.
அதேபோல் மைசூரில் 2,300 கோடி ரூபாய் முதலீட்டில் 6 லட்சம் கிலோ டன் உற்பத்தித் திறன் கொண்ட தொழிற்சாலையை மைசூரில் அமைக்க ஏசியன் பெயிண்ட்ஸ் முடிவு செய்துள்ளது.
இப்புதிய தொழிற்சாலையின் முதல்கட்டமாக வருடத்திற்கு 3 லட்சம் கிலோ லிட்டர் பெயிண்டை 2019ஆம் நிதியாண்டில் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளோம் என ஏசியன் பெயிண்ட்ஸ் நிர்வாக தலைவர் மற்றும் தலைமை நிர்வாகி கேபிஎஸ் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
சுமார் 16 நாடுகளில் இயங்கி வரும் ஏசியன் பெயிண்ட்ஸ் இயங்கி வரும் நிலையில் சுமார் 25 உற்பத்தி தொழிற்சாலைகளை அமைத்து சுமார் 60 நாடுகளில் வர்த்தகம் செய்து வருகிறது.