இந்திய மென்பொருள் சந்தையில் இருக்கும் நிறுவனங்களில் 3வது இடத்தைத் தக்கவைத்துக்கொள்ளப் போராடி வரும் விப்ரோ-வின் தலைமை நிர்வாக அதிகாரியான அபித் அலி நீமுச்வாலா-விற்கு 2018ஆம் நிதியாண்டிற்காகச் சம்பளத்தில் சுமார் 34 சதவீதம் அதிகரித்துச் சுமார் 18.2 கோடி ரூபாய் அளவிலான சம்பளத்தைப் பெற்றுள்ளார்.
அபித் அலி நீமுச்வாலா பெற்ற சம்பளத்தில் 6.2 கோடி ரூபாய் சம்பளமாகவும், 10.2 கோடி பங்குகளாகவும், 1.71 கோடி வேரியபில் பே ஆகவும், 30 லட்சம் ரிட்டிரைல்ஸ் ஆகப் பெற்றுள்ளார்.
அதேபோல் விப்ரோ நிறுவனத்தின் தலைமை மூலோபாயம் அதிகாரியான ரிஷித் ப்ரேம்ஜி-யின் சம்பளம் சுமார் 250 சதவீதம் அதிகரித்து 5.9 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இவர் விப்ரோ குழுமத்தின் தலைவரான அசிம் பிரேம்ஜி-யின் மகன் தான் ரிஷித் ப்ரேம்ஜி.
அதேபோல் அசிம் பிரேம்ஜி-யின் சம்பளம் 2018இல் சுமார் 10 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது.
விப்ரோ நிறுவனத்தில் பலரின் சம்பளம் உயர்வு இந்த வருடம் குறைந்துள்ளது, இதுமட்டும் அல்லாமல் இந்நிறுவனத்தின் 2 வாடிக்காயாளர்கள் திவால் ஆனதாலும் தற்போது விப்ரோ தற்போது பல பிரச்சனைகளைச் சந்தித்து வருகிறது.
மேலும் மார்ச் 2018 முடிவில் விப்ரோ நிறுவனத்தில் இருந்த 1,37,000 ஊழியர்கள் எண்ணிக்கை தற்போது 1,33,000 ஆகக் குறைந்துள்ளது.