வட்டி விகிதத்தை உயர்த்திய பஞ்சாப் நேஷனல் வங்கி.. நீரவ் மோடி எதிரொலியா..?

நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி கடனுக்கான வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. இதனால் பிஎன்பி வங்கியின் வீட்டுக் கடன், வாகன கடன், தனிநபர் கடன் என அனைத்து வகையான கடனுக்காக ஈஎம்ஐயும் அதிகரிக்கும் நிலை உருவாகியது.

ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி

சமீபத்தில் நாட்டின் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்த ரிசர்வ் வங்கி தனது வட்டி விகிதத்தை மறுசீரமைரப்பு செய்தது, இதன் வாயிலாகத் தற்போது வணிக வங்கிகளும் வட்டி விகித்தை உயர்த்தி வருகிறது.

இதன் வரிசையில் பஞ்சாப் நேஷனல் வங்கிக் கடனுக்கான வட்டி விகிதத்தை 0.05 முதல் 0.10 சதவீதம் வரையில் உயர்த்தியுள்ளது.

 

பஞ்சாப் நேஷனல் வங்கி

பஞ்சாப் நேஷனல் வங்கி

இந்நிலையில் 6 மாத கடனுக்குத் தற்போது 10 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி 8.40 சதவீதமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் 1,2,3 வருடக் கடன்களுக்கு 5 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி 8.45, 8.60, 8.20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

அலகாபாத் வங்கி

அலகாபாத் வங்கி

பிஎன்பி வங்கியைப் போல் அலகாபாத் வங்கியும் தனது கடனுக்கான அடிப்படை வட்டி விகிதத்தை 0.10 சதவீதம் வரையில் உயர்த்தி அறிவித்துள்ளது. 1,2,3 வருட கடன்களுக்கு 10 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி 8.45, 8.60, 8.20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

நீரவ் மோடி

நீரவ் மோடி

பஞ்சாப் நேஷனல் வங்கி ஏற்கனவே அதிகளவிலான வராக்கடன் பிரச்சனை மற்றும் வருவாய் பாதிப்புகளைச் சந்தித்து வரும் நிலையில், இந்த வட்டி விகித உயர்வின் மூலம் கூடுதல் வருவாய் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதோடு இவ்வங்கியில் நீரவ் மோடி செய்த 12,000 கோடி மோசடி வழக்குகள் பெரிதாக வெடித்துள்ள நிலையில் வட்டி உயர்வை அறிவித்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+