கிட்டத்தட்ட 10 லட்சம் வணிகர்கள் இணைந்து இந்திய இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் மற்றும் அமெரிக்க வால்மார்ட் எதிராக நாடு தழுவிய போராட்டத்தினைச் நடத்தி வருகின்றனர்.
பிளிப்கார்ட் நிறுவனத்துடன் வால்மார்ட் இணைந்து செயல்படும் போது சந்தையினைப் பிடிக்க மிகக் குறைவான விலை, மிக அதிக டிஸ்கன்வுட் மற்றும் முதலீடுகள் நட்டம் போன்றவை அடைய வாய்ப்புள்ளது. பிளிப்கார்ட்டின் 77 சதவீத பங்குகளை 16 பில்லியன் டாலர் மதிப்பில் வால்மார்ட் வாங்கியுள்ளது.
சிறு வணிகர்களுக்குப் பாதிப்பு
பிளிப்கார்ட் மற்றும் வால்மார்ட் இடையில் போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தினை எதிர்த்து அனைத்து இந்திய வணிகர்கள் சங்கம் போராடி வருகிறது. இந்தியாவில் பிளிப்கார்ட் மூலம் கால் அடி எடுத்து வைக்கும் வால்மார்ட் மூலம் சிறு வணிகர்கள் பெரும் அளவில் பாதிக்கப்படுவார்கள் என்று கூறுகின்றனர்.
இ-காமர்ஸ்
இ-காமர்ஸ் வணிகத்தினைக் கட்டுப்படுத்துவதற்கான எந்த ஒரு சட்டமும் இந்தியாவில் இல்லை என்பதால் வெளிநாட்டு நேரடி முதலீடு மூலம் எளிதாக வால்மார்ட்டுக்கு இந்திய சந்தையில் காலூன்ற வாய்ப்பு கிடைத்துள்ளது.
கடிதம்
போட்டி
சர்வதேச அளவில் விலை குறைவாக விற்று வால்மார்ட்டுக்கு போட்டி யாரும் இல்லை என்ற நிலைக்கு இந்த இணைவு கொண்டு செல்லும். இ-காமர்ஸ் வணிகங்களுக்கு என இது வரை எந்தச் சட்டத்தினை இந்திய அரசு வகுக்கவில்லை. இது குறித்துக் கடிதத்தினையும் வணிகத் துறை அமைச்சரான சுரேஷ் பிரபுவிடம் அனைத்து இந்திய வணிகர் சங்கங்கள் அளித்துள்ளன.
நீதிமன்றம் செல்ல தயார்
வணிகர் சங்கங்கள் பிளிப்கார்ட் - வால்மார்ட் ஒப்பந்தத்திற்கு இன்னும் இந்தியா காம்பெட்டிஷன் ஆணையம் ஒப்புதல் அளிக்கவில்லை. அந்த அனுமதியை வழங்க கூடாது என்றும் இரண்டு நிறுவனங்களும் இணைவதை எதிர்த்து நீதிமன்றம் செல்லவும் வணிகர் சங்கங்கள் தயாராக உள்ளன.
இ-காமர்ஸ் கொள்கை
அனைத்து இந்திய வணிகர் சங்கமானது இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கான கொள்கை ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும், அனைத்து இ-காமர்ஸ் நிறுவனங்களையும் கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றன. மேலும் இதற்கான கொள்கைகளை இருவாக்கும் வரை இரண்டு நிறுவனங்களும் இணைய ஒப்புதல் அளிக்கக் கூடாது என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
இணைவு எப்போது நடக்கும்?
பிளிப்கார்ட் மற்றும் வால்மார்ட் நிறுவனங்கள் முழுமையாக இணைய 2019 ஜூன் 7 வரை கால அவகாசம் உள்ள நிலையில் வால்மார்ட் அதனை 2018-ம் ஆண்டின் இறுதிக்குள் செய்ய வேண்டும் இருக்கின்றது.
கிழக்கு இந்திய கம்பெனி
சுதந்திரப் போராட்டங்களின் போது இந்தியா எப்படிக் கிழக்கு இந்திய கம்பெனிக்கு எதிராகப் போராடியதோ அதே போன்ற ஒரு நிறுவனம் தான் அமெரிக்காவின் வால்மார்ட் என்றும் அனைத்து இந்திய வணிகர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!



Click it and Unblock the Notifications