நட்டத்தில் இயங்கி வரும் பொதுத் துறை நிறுவனமான ஏர் இந்தியா ஊழியர்களின் கிராஜூவிட்டி 10 லட்சம் ரூபாயில் இருந்து 20 லட்சமாக உயர்த்துவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கிராஜூவிட்டி திருத்த சட்டம் 2018, மார்ச் 29-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் கிராஜூவிட்டி 10 லட்சம் ரூபாயில் இருந்து 20 லட்சம் ரூபாய் ஆக உயர்த்தப்பட்டது.
ஏர் இந்தியா
ஏர் இந்தியா நிறுவன போர்டு உறுப்பினர்கள் இடையிலான கூட்டம் மே மாதம் நடைபெற்ற போதே கிராஜூவிட்டி உயர்வுக்கான அனுமதிகள் வழங்கப்பட்ட நிலையில் தற்போது அது முழுமையாக அமலுக்கு வந்துள்ளதாகத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
ஊழியர்கள்
ஏர் இந்தியாவின் இந்த முடிவினால் 6,500 ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.
கிராஜூவிட்டி
ஒரு நிறுவனத்தில் 5 வருடங்களுக்குக் கூடுதலாகப் பணிபுரிந்த பிறகு வெளியேறும் போது ஊழியரின் சேவையினைப் பாராட்டும் படி இந்தக் கிராஜூவிட்டி அளிக்கப்படுகிறது. ஒரு வேலை ஒரு 5 வருடங்கள் 6 மாதம் வரை ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்தால் 6 வருட கிராஜூவிட்டி பணம் கிடைக்கும். முன்பு 10 லட்சம் என்று இருந்த அதிகபட்ச வரம்பானது தற்போது 20 லட்சம் ரூபாய் என உயர்த்தப்பட்டுள்ளது.
கோரிக்கைகள்
ஊழியர்கள் சங்கங்ள் கிராஜூவிட்டி தொகையினை 10 லட்சத்தில் இருந்து 20 லட்சமான உயர்த்த வேண்டும் என்பது மட்டும் இல்லாமல் 5 ஆண்டுகள் என்ற வரம்பை 3 ஆண்டாகக் குறைக்க வேண்டும் என்றும் 7 வது சம்பள கமிஷனில் கோரிக்கை வைத்து இருந்த நிலையில் தொகை மற்றும் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.