மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மாநில முழுவதும் பிளாஸ்டிக் பயன்படுத்துவதைத் தடை செய்ய உத்தரவிட்ட நிலையில் தற்போது உத்தரப் பிரதேச மாநிலமும் பிலாஸ்டிகிற்குத் தடை விதித்துள்ளது.
யோகி ஆதித்யநாத்
உத்தரப் பிரதேச மாநில முதல்வர் ஆதித்யநாத் ஜூலை 15 முதல் மாநிலம் முழுவதும் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்த தடையை அறிவித்துள்ளார். இதன் மூலம் இனி உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் பிளாஸ்டிக் கப், பிளாஸ்டிக் கிளாஸ் ஆகியவற்றைப் பயன்படுத்த முடியாது.
முதல் அறிவிப்பு
மகாராஷ்டிரா அரசு மார்ச் 23ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், இனி மாநிலத்தில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களான பேக், ஸ்பூன், பிளேட், PET மற்றும் PETE பாட்டில், தெர்மாகோல் பொருட்கள் ஆகியவற்றைத் தயாரிக்கவோ, பயன்படுத்தவோ, விற்பனை செய்யவோ, விநியோகம் செய்யவோ, சேமிக்கவோ கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
3 மாதம் அவகாசம்
இதை முழுமையாக அமல்படுத்த மகாராஷ்டிரா அரசு 3 மாதம் அவகாசம் கொடுத்த நிலையில் ஜூன் 23 உடன் இந்தக் காலக்கெடு முடிவடைந்தது. தற்போது பிளாஸ்டிக் பொருட்களை முழுமையாகப் புழக்கத்தில் இருந்து நீக்கும் பணிகளைச் செய்து வருகிறது.
கடுமையான அபராதம்
இதைக் கடைப்பிடிக்காமல் இருக்கும் மக்கள் முதல் முறை தண்டனையாக 5,000 ரூபாய் அபராதமும், 2வது தண்டனைப் பெறுபவர்கள் மீது 10,000 ரூபாயும், 3வது முறை தண்டனை பெறுபவர்கள் மீது 25,000 ரூபாய் அபராதம் மற்றும் 3 மாத சிறை தண்டனையும் அளிக்கப்படும் என இம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
ரூ.15,000 கோடி வர்த்தக
மகாராஷ்டிரா அரசின் உத்தரவால் மும்பையை மையமாகக் கொண்டு இருக்கும் பல பிளாஸ்டிக் உற்பத்தி தொழிற்சாலைகள் முடங்கும். இதனால் 15,000 கோடி ரூபாய் வர்த்தகம் முழுமையாகப் பாதிக்கப்படுவது மட்டும் அல்லாமல் 3 லட்ச வேலைவாய்ப்புகளும் பாதிக்கிறது எனப் பிளாடிக் பை உற்பத்தியாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!



Click it and Unblock the Notifications