அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு வெள்ளிக்கிழமை 8 பைசா உயர்ந்து 69.03 ரூபாய் ஆக உள்ளது. இந்திய ரூபாய் மதிப்பின் இந்தச் சரிவுக்கு அமெரிக்காவில் இருந்து வெளிநாட்டுக்கு முதலீடுகள் செல்வதைக் குறைத்து இருப்பதே காரணம் ஆகும்.
வியாழக்கிழமை அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 21 பைசா உயர்ந்து 68.95 ரூபாய் ஆக இருந்தது. இந்திய சந்தையில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் செய்த முதலீடு நேற்று அதிகளவில் விற்கப்பட்ட நிலையில் இன்று ரூபாய் மதிப்பு சரிந்துள்ளது.
ஆசிய சந்தை
ஆசிய சந்தையிலேயே இந்திய ரூபாய் மதிப்பு தான் இன்று மிகப் பெரிய மோசமான சரிவினை பெற்றுள்ளது. ஒரு டலருக்கு எதிராக 8 பைசா வரை கூடுதலாக இந்திய ரூபாய் மதிப்பு சரிந்துள்ளது.
பொருளாதாரம்
நடப்பு ஆண்டில் இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணத அளவில் சரிந்து இருந்தாலும் மீண்டும் வேகமாக வளரும் பொருளாதாரம் படைத்த நாடு என்ற இடத்தினை இந்தியா பிடித்துள்ளது.
கச்சா எண்ணெய்
வர்த்தகப் போர் மற்றும் ஈரான் மீதான பொருளாதாரத் தடை போன்ற காரணங்களால் மீண்டு கச்சா எண்ணெய் சர்வதேச சந்தையில் மிகப் பெரிய அளவில் உயரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்தியா ரூபாய் மதிப்பு சரிவானது மிகப் பெரிய பொருளாதாரப் பின்னடைவை ஏற்படுத்தும்.
ஆர்பிஐ
சர்வதேச அளவில் சீனாவிற்கு அடுத்தபடியாக மிகப் பெரிய அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா உள்ளது. ரூபாய் மதிப்பு டரியும் போது பணவீக்கமும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. இதனைக் கட்டுக்குள் கொண்டு வர ஆர்பிஐ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.