உலக வர்த்தகச் சந்தைக்கு ஏற்ப இந்தியாவில் அனைத்துத் துறையிலும் ஆட்டோமேஷன் அதிகரித்து வரும் நிலையில், தற்போது ரோபோடிக்ஸ் துறையில் அதிகளவில் வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளது. இதுவும் மகாராஷ்டிராவில் மட்டும் இத்துறை ஊழியர்கள் அதிகளவில் தேவைப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
ஆய்வு
மே 2015 மற்றும் மே 2018 இடைப்பட்ட காலத்தில் மட்டும் இந்தியாவில் ரோபோடிக்ஸ் தொழில்நுட்பத்தில் வேலைவாய்ப்புக்காக ஊழியர்களைத் தேடும் நிறுவனங்கள் எண்ணிக்கையும் சுமார் 186 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது என இன்டீட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வேலைவாய்ப்பு
இதேகாலக்கட்டத்தில் ரோபோடிக்ஸ் துறையில் வேலைவாய்ப்பு எண்ணிக்கை சுமார் 191 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கியத் துறை
தற்போது இந்தியாவில் ரோபோடிக்ஸ் தொழில்நுட்பம் கட்டுமானம், உற்பத்தி, மருத்துவத் துறையிலும் கூடப் பயன்படுத்தத் துவங்கப்பட்ட நிலையில், இந்தியாவில் இத்துறையில் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது.
இன்னும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளைப் போல அனைத்தும் துறையிலும் ரோபோடிக்ஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் துவங்கினால் இத்துறையில் பல கோடி வேலைவாய்ப்புகள் உருவாகும்.
மேக் இன் இந்தியா
2015ஆம் ஆண்டில் மட்டும் மத்திய அரசு மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் ரோபோடிக்ஸ் துறையில் சுமார் 13 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டைச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய மாநிலம்
மேலும் ரோபோடிக்ஸ் துறையில் அதிக வேலைவாய்ப்புகள் உருவாகி வருவதில் மகாராஷ்டிர மாநிலம் முதல் இடத்திலும் இருந்தாலும், கர்நாடகா, தெலுங்கான ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளது.