மென்பொருள் ஏற்றுமதியில் நாட்டின் முன்னணி நிறுவனமாக இருக்கும் இன்போசிஸ், பெங்களுரீல் மிகப்பெரிய அளவில் அமைக்கப்படும் மெட்ரோ ரயில் திட்டத்திற்குச் சுமார் 200 கோடி ரூபாய் அளித்துள்ளதாகக் கர்நாடக முதல்வர் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பெங்களூரில் மெட்ரோ ரயில் சேவை இருக்கும் நிலையில், தற்போது முக்கியமான வர்த்தகப் பகுதியை இணைக்கப் புதிய பாதையில் மெட்ரோ ரயில் சேவை விரிவாக்கம் செய்யப்படுகிறது.
இந்நிலையில் பெங்களுரூ எலக்ட்ரானிக் சிட்டி பகுதிக்கு அருகில் இருக்கும், கொனாபான அக்ரகாரா பகுதியில் மெட்ரோல் ரயில் நிலையத்தை அமைக்க இன்போசிஸ் அறக்கட்டளை சுமார் 200 கோடி ரூபாய் நிதியுதவி செய்துள்ளது.
இதற்கான ஒப்பந்தம் ஜூலை 19ஆம் தேதி கர்நாடக அரசு மற்றும் இன்போசிஸ் மத்தியில் கையெழுத்திடப்பட உள்ளது. மேலும் இதற்கான அறிவிப்பை இன்போசிஸ் அறக்கட்டளையின் தலைவர் சுதா மூர்த்திச் சந்தித்த பின்பு இந்த அறிவிப்பைக் குமாரசுவாமி வெளியிட்டார்.
பெங்களுரில் ஆர்வி ரோடு முதல் எலக்ட்ரானிக் சிட்டி வரையிலான சுமார் 19.6 கிலோமீட்டர் மெட்ரோ ரயில் திட்டத்தை 1,794 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டில் செய்ய உள்ளது கர்நாடக அரசு.