சேட்டனுக்குக் கிடைத்த ஜாக்பாட்.. 13 கோடி பரிசு..!
அபுதாபியில் ரபேல் டிக்கெட் விற்பனை மூலம் சுமார் 7 மில்லியன் திராஹாம் பரிசை வென்றார் கேரளாவை சேர்ந்த டோஜோ மேத்யூவ் அவர்களுக்கு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 13 கோடி ரூபாய் அளவிலான பரிசை பெற்றுள்ளார். இவரின் நண்பர்களின் மூலம் இந்த டிக்கெட்டை பெற்றதாக டோஜோ கூறியுள்ளார்.

கடந்த 6 வருடமாக அபுதாபியில் சிவில் சூப்பர்வைசராக இருந்த டோஜோ சமீபத்தில் தனது பணியை ராஜினாமா செய்தார். ஜூன் 24ஆம் தேதி தனது பணியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவிற்குக் கிளம்பும் போது ரபேல் டிக்கெட் வாங்கியுள்ளனர்.
18 நண்பர்கள் இணைந்து காசு சேர்த்து பிரிசாக இந்த டிக்கெட்டை டோஜோ-விற்கு அளித்துள்ளனர். இந்தப் பரிசை கொண்டு டோஜோ கேரளாவில் தனது கனவு வீட்டை வாங்கியுள்ளார்.


Click it and Unblock the Notifications