அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 68.76 ரூபாயாக் இருக்கும் நிலையில், இந்த வார இறுதிக்குள் தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், இந்த வார இறுதிக்குள் ரூபாய் மதிப்பு 70 ரூபாயை அடையும் எனக் கணிப்புகளும் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி அதிகளவிலான டாலரை விற்பனை செய்யும் காரணத்தால் நாட்டின் அன்னிய செலவாணி 1.757 பில்லியன் டாலர் வரையில் குறைந்துள்ளது.
இதன் மூலம் அன்னிய செலவாணி ஏப்ரல் 13ஆம் தேதி அதிகப்பட்ச நிலையாக 426.08 பில்லியன் டாலராக இருந்த நிலையில், ஜூன் 22க்கு பின்னான வாரத்தில் 406.06 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது என ஆர்பிஐ தரவுகள் கூறுகிறது.
ஜூன் 22க்குப் பின் ஒவ்வொரு வாரத்திலும் அன்னிய செலவாணி தொடர்ந்து குறைந்த வண்ணமே உள்ளது. மேலும் கச்சா எண்ணெயின் அதீத விலை காரணமாகத் தற்போது நாட்டின் நடப்பு கணக்குப் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாகவும் ரூபாய் மதிப்பு அதிகளவிலான சரிவை அடைந்து வருகிறது.
நடப்பு நிதியாண்டில் மட்டும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சுமார் 8 சதவீதம் அளவிலான சரிவை அடைந்துள்ளது.