உலகின் முன்னணி எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் உத்தரப் பிரதேசத்தில் இருக்கும் நொய்டாவில் 35 ஏக்கர் பரப்பளவில் சுமார் புதிய ஸ்மார்ட்போன் தயாரிப்பு தொழிற்சாலையைச் சாம்சங் துவங்கியுள்ளது.
இந்தத் தொழிற்சாலையை இன்று பிரதமர் மோடி மற்றும் தென் கொரிய நாட்டின் அதிபர் மூன் ஜே-இன் ஆகியோர் இணைந்து துவங்கி வைக்கின்றனர்.
ஜூன் 2017
கடந்த வருடம் ஜூன் மாதம் சாம்சங் நிறுவனம் நொய்டாவில் இருக்கும் தனது உற்பத்தி தளத்தை விரிவாக்கம் செய்ய 4,915 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை அறிவித்துத் தனது விரிவாக்கப் பணிகளைத் துவங்கியது.
உற்பத்தித் திறன்
சாம்சங் நிறுவனத்தின் திட்ட படி, தற்போது 67 மில்லியன் ஸ்மார்ட்போன் தயாரிக்கும் தொழிற்சாலையை விரிவாக்கத்தின் மூலம் சுமார் 120 மில்லியன் போன்களைத் தயாரிக்கும் அளவிற்கு உயர்த்தியுள்ளது.
மேலும் சாம்சங் தமிழ்நாட்டிலும் ஒரு உற்பத்தி தொழிற்சாலையை வைத்துள்ளது.
இந்தியா தான் உற்பத்தி களம்
சாம்சங் நிறுவனத்தின் சர்வதேச சந்தை வர்த்தகத்திற்குத் தேவையான சாதனங்களை 10 சதவீதம் மட்டுமே இந்தியாவில் இருந்து செல்லும் நிலையில், அடுத்த 3 வருடத்தில் இதன் அளவை 50 சதவீதம் வரையில் உயரும் எனத் தெரிகிறது.
இதன் மூலம் சாம்சங் நிறுவனத்திற்கு ஆஸ்தான உற்பத்தி களமாக இந்தியா இருக்கப்போகிறது.
வேலைவாய்ப்பு
ஏற்கனவே சாம்சங் நிறுவனத்தின் இந்திய நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலையில் 70,000 பேர் பணியாற்றும் நிலையில், இப்புதிய விரிவாக்கத்தின் மூலம் கூடுதலாக 15,000 வேலைவாய்ப்புகள் உருவாகும் எனத் தெரிகிறது.
1990 முதல்...
சாம்சங் முதன் முதலாக 1990இல் இந்தியாவில் தனது உற்பத்தி தளத்தை அமைத்தது, இதன் பின் 1997இல் டிவி தயாரிப்புக்காகத் தனிப்பட்ட தளத்தை அமைத்தது. 2005ஆம் ஆண்டு மொபைல் போன் பயன்பாடு அதிகரித்த நிலையில் இதற்காகப் பிரத்தியேகமாக ஒரு தொழிற்சாலையை அமைத்தது சாம்சங்.
பிற சாதனங்கள்
தற்போது செய்யப்பட்டுள்ள விரிவாக்கப் பணிகள் ஸ்மார்ட்போன் தயாரிப்புக்காக மட்டும் இல்லை, இந்நிறுவனத்தின் பிரிட்ஜ், டிவி, ஏசி ஆகிய பிற எலக்ட்ரானிக் சாதனைகளைத் தயாரிக்கவும் அதனை முறையாக வர்த்தகப்படுத்த வேண்டும் எனத் திட்டமிட்டு இப்புதிய விரிவாக்கப் பணிகளைச் செய்து வருகிறது.
மொபைல் தொழிற்சாலை
4,915 கோடி ரூபாய் முதலீட்டில் சாம்சங் செய்த விரிவாக்கப் பணிகள் மூலம் உலகின் மிகப்பெரிய மொபைல் தொழிற்சாலையாகத் தற்போது நொய்டா தொழிற்சாலை விளங்குகிறது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications