2014-ம் ஆண்டுப் பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்ற பிறகு உலகின் 6-ம் மிகப் பெரிய பொருளாதாரம் படைத்த நாடாக இந்தியா முன்னேற 4 நாடுகளைப் பின்னுக்குத் தள்ளியுள்ளது என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.
இந்தியாவின் ஜிடிபி 7 சதவீதத்திற்கும் அதிகமாகவே இருந்தால் 2018-ம் ஆண்டின் இறுதிக்குள் இங்கிலாந்தினை பின்னுக்குத் தள்ளி 5 இடத்தினை இந்தியா பிடிக்கவும் வாய்ப்புகள் உள்ளது.
10 வது இடம்
2014-ம் ஆண்டுப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஆட்சி அமைத்த போது உலகப் பொருளாதாரப் பட்டியலில் அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ், பிரேசில், இத்தாலி மற்றும் ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக இந்தியா 10வது இடத்தில் இருந்தது.
2017
2017-ம் ஆண்டு இறுதியில் இந்தியாவின் பொருளாதாரம் 2.597 டிரில்லியன் டாலராக இருந்த நிலையில் அது இங்கிலாந்தினை விட 25 பில்லியன் டாலர் மட்டுமே குறைவாகும்.
சீனா - இந்தியா
சீனாவின் பொருளாதாரம் 6.6 சதவீதமாக உள்ள நிலையில் இந்தியாவின் பொருளாதாரம் 2018 இறுதியில் 7.4 சதவீதமாகவும், 2019-ல் 7.8 சதவீதமாகவும் இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
2028 கணிப்பு
2028-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியானது ஜெர்மனி, ஜப்பானை விட அதிகமாக இருக்கும் என்றும் உலகின் 3-ம் மிகப் பெரிய பொருளாதாரம் படைத்த நாடாக உருவெடுக்கும் என்றும் போஃபா மெரில் லிஞ்ச் சர்சதேச ஆய்வானது குறிப்பிட்டுள்ளது.
மார்கன் ஸ்டான்லி
இந்தியாவின் பொருளாதாரம் அடுத்த 10 வருடத்தில் 6 டிரில்லியன் டாலராக அதிகரித்து மூன்றாம் மிகப் பெரிய பொருளாதாரம் படைத்த நாடாக இருக்கும் என்று மார்கன் ஸ்டான்லி தெரிவித்துள்ளது.
தனிநபர் வருவாய்
இந்தியா 6-ம் மிகப் பெரிய பொருளாதாரம் படைத்த நாடாக வளர்ந்துள்ள நிலையில் தனிநபர் வருவாய் 2,130 டாலர் ஆக உள்ளது. அதே நேரம் இந்தியாவினை குறைவாகப் பொருளாதாரம் உள்ள பிரான்ஸ் தனிநபர் வருவாய் 44,930 டாலராகவும், பிரேசில் தனிநபர் வருவாய் 10,220 டாலர், இத்தாலி 35,910 டாலர், ரஷ்யா 11,950 டாலராக உள்ளது. 2016-ம் ஆண்டின் தனிநபர் வருவாய் பட்டியலில் இந்தியா 126 வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் உள்ள மக்கள் மிகப் பெரிய அளவிலான மக்கள் தொகை அவர்களது இலக்குகளை அடைய எளிமையாக இருந்தாலும் வருவாய் சமநிலையில் மிகவும் பின்தங்கியுள்ளது.
கோடீஸ்வரர்கள்
இந்தியாவில் உள்ள 1 சதவீத கோடீஸ்வரர்களிடம் தான் மொத்த நாட்டின் 73 சதவீத செல்வமும் உள்ளது என்று ஆக்ஸ்ஃபாம் சர்வே தெரிவித்துள்ளது.
மக்கள் தொகை
இந்தியாவின் மக்கள் தொகையைத் தற்போது உள்ள நிலவரத்தினை வைத்து பார்க்கும் 2024-ம் ஆண்டுக்குள் சீனாவினை விட அதிகரித்து மக்கள் தொகை அதிகம் உள்ள நாடு என்ற இடத்தினை எட்டும் என்றும் தரவுகள் கூறுகின்றன. எனவே அரசுகள் அதற்கு ஏற்ற சட்டங்களை வகுத்து நிலைமையைக் கட்டுக்குக்கொண்டு வர வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

துபாய், சவுதி வாழ் இந்தியர்களுக்கு மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!! இந்த நம்பரை சேவ் பண்ணிக்கோங்க!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் தாக்குதல்: இந்தியர்களுக்கு பாதுகாப்பான இடம் தர மறுத்ததா இஸ்ரேல்? வைரலாகும் புகைப்படம்

2030 தான் இலக்கே!! மாஸாக ஸ்கெட்ச் போட்ட முதலமைச்சர் ஸ்டாலின்!! அடுத்தடுத்த அதிரடி!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?



Click it and Unblock the Notifications