இந்திய ஸ்டார்ட்அப் சந்தையைப் புரட்டி போட்ட வால்மார்ட் பிளிப்கார்ட் இணைப்பு இன்னும் முழுமையாக முடியாத நிலையிலேயே, இக்கூட்டணிக்கு எதிராக ஒரு பக்கம் அமேசான், மறுபுறம் ஜியோ எனத் திட்டமிட்டு அதிகளவிலான முதலீட்டைச் செய்து வருகின்றனர்.
ஆனால் வால்மார்ட் - பிளிப்கார்ட் இணைப்பிற்கு இன்னமும் வருமான வரித்துறை மற்றும் CCI அமைப்பு ஒப்புதல் அளிக்காமல் உள்ளது.
வரி நிலுவை
வருமான வரித்துறை கூறுகையில், பிளிப்கார்ட் வரி நிலுவையை வைத்துள்ளது, அதனை முழுமையாகத் தீர்க்கப்பட்டால் மட்டுமே இந்த இணைப்பிற்கு ஒப்புதல் அளிக்கப்படும் அதனை அடிப்படையாகக் கொண்டே சிசிஐ அமைப்பு ஒப்புதல் அளிக்கும்.
வால்மார்ட்
வரி நிலுவை குறித்து வருமான வரித்துறைக்கு வால்மார்ட் எழுதிய கடிதத்தில், இரு நிறுவனங்களின் இணைப்பிற்காக ஒழுங்குமுறை தேவைகள் மற்றும் வரி நிலுவை பிரச்சனைகளை முழுமையாகத் தீர்த்து தேவைகளைப் பூர்த்திச் செய்யத் தயாராக உள்ளோம் எனத் தெரிவித்துள்ளது.
வருமான வரித்துறை
பிளிப்கார்ட் செலுத்த வேண்டி வரி நிலுவை மற்றும் பிறமாற்றத்திற்கான மறைமுக வரி ஆகியவற்றைக் கணக்கிடுவதில் உதவி தேவை என்றாலும், வால்மார்ட் தயாராக உள்ளது என அறிவித்துள்ளது எனவும் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளது.
கால அளவீடு
இந்நிலையில் 2018ஆம் ஆண்டின் முடிவிற்குள் பிளிப்கார்ட் நிறுவனத்தின் 77 சதவீத பங்குகளைக் கைப்பற்றுதல் பணிகளை முழுமையாக முடித்துவிட்டு ஜூன் 2019குள் வால்மார்ட்-பிளிப்கார்ட் கூட்டணிக்கான புதிய முதலீட்டை ஈர்க்கும் பணிகள் துவங்க வேண்டும் என வால்மார்ட் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.