டிவிட்டர் நிறுவனம் அன்மையில் போலி மற்றும் சந்தேகத்திற்குரிய கணக்குகளை வைத்துள்ளவர்களை நீக்கியதால் அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் மற்றும் சமுக ஊடக செல்வாக்குப் படைத்தவர்களைப் பின்தொடருபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
டிவிட்டர் நிறுவனத்தின் இந்த முடிவினால் 7.7 மில்லியன் பயனர்கள் என 12 சதவீத கணக்குகள் நீக்கப்பட்டுள்ளது.
மோடி - ராகுல்
டிவிட்டரின் இந்த முடிவினால் பிரதமர் மோடியின் 3,00,000 பின் தொடர்புவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதே நேரம் அவரது எதிர் தலைவரான ராகுல் காந்தியினை 17,000 நபர்கள் மட்டுமே போலியாகப் பின்தொடர்ந்துள்ளனர்.
பிரதமர் அலுவலகம்
பிரதமர் அலுவலகம் டிவிட்டர் கணக்கில் இருந்து 1,40,635 நபர்கள் போலி என நீக்கப்பட்டுள்ளனர்.
டிரம்ப் - ஒபாமா
அமெரிக்க அதிபரான டொனால்டு டிரம்ப்க்கு 53.4 மில்லியனர் பயனர் இருந்த நிலையில் 1,00,000 நபர்களை இழந்தார். இவர் அதிபராக வெற்றி பெற்ற பிறகு இவரைப் பின் தொடர்புவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தது.
முன்னால் அமெரிக்க அதிபர் பராக் ஒபாவின் டிவட்டரில் இருந்து 4,00,000 போலி பின் தொடர்பாளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
பாலிவுட்
ஷாருக்கானை 3,62,141 நபர்களும், சல்மான் கானை 3,40,884 நபர்களும், அமீர் கானை 3,16,900 நபர்களும், பிரயங்கா சோப்ராவை 3,54,830 நபர்களும், தீபிகா படுகோனேவை 2,88,298 நபர்களும் போலியாகப் பின் தொடர்ந்து இருந்ததாக நீக்கப்பட்டுள்ளனர்.
அமிதாப் பச்சான்
அமிதாப் பச்சனின் டிவிட்டர் கணக்கை பின் தொடர்ந்த 4,24,000 நபர்களை நீக்கியுள்ள நிலையில் டிவட்டரை விட்டு தான் முழுமையாக வெளியேற இருப்பதாகவும் அமிதாப் பச்சன் கூறியுள்ளார்.