2019 பொதுத் தேர்தலில் பிதமர் நரேந்திர மோடி திரும்ப வெற்றி பெறவில்லை என்றால் இந்தியாவின் வளர்ச்சிக்கு ஆபத்து நேரிடும் என்று அமெரிக்கத் தொழிலதிபர் தெரிவித்துள்ளார்.
சிஸ்கோ சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகத் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியை ஜான் சேம்பர்ஸ் இந்திய செய்தியாளர்களுடனான சந்திப்பில் வரும் நாட்களில் இந்தியாவிற்கு சிறந்த வளர்ச்சியை அடையக் கூடிய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
எப்போது?
இந்தியா சிறந்த அளவில் வளர்ச்சியினை அடைய குறைந்தது 10 ஆண்டுகளாவது தேவைப்படும். அதனைச் செய்யக்கூடிய திறன் உங்களது பிரதமர் நரேந்திர மோடிக்கு உள்ளது என நான் நினைக்கிறேன். இந்தியாவைச் சரியான பாதையில் அவர் வழிநடத்தி செல்கிறார் என நினைக்கிறேன் என்றும் சேம்பர்ஸ் கூறியுள்ளார்.
ஆபத்து
அதே நேரம் வர இருக்கும் பொதுத் தேர்தலில் அவர் மீண்டும் வெற்றிபெறவில்லை என்றால் இந்தியாவின் வளர்ச்சிக்கு ஆபத்து தான் என்றும் குறிப்பிட்டார்.
மோடி வெற்றிபெறவில்லை என்றால் என்ன ஆகும்?
2019 தேர்தலில் மோடி வெற்றிபெறவில்லை என்றால் என்ன ஆகும்? என்று கேட்டதற்கு மோடிக்குத் தைரியம் அதிகம். ஒவ்வொரு நாளும் அவர் தூங்கி எழும் போது இந்தியாவின் எதிர்காலத்தினைப் பற்றிய சிந்தனையில் தான் உள்ளார் என்றும் கூறினார்.
இந்தியா - அமெரிக்கா உறவு
இந்தியா - அமெரிக்கா இருதரப்பு உறவுகளில் மிகப் பெரிய வளர்ச்சி சாத்தியங்கள் உள்ளது. இதன் தாக்கம் இரண்டு நாடுகளிலும் பெரும் அளவில் இருக்கும், அப்போது அவற்றில் சில எங்களுக்குப் பதிப்பு ஏற்படுத்தக் கூடியதாக இருந்தாலும் இந்தியாவிற்கு மிகப் பெரிய வெற்றியாக இருக்கும் என்றும் ஜான் சேம்பர்ஸ் குறிப்பிட்டுள்ளார்.