மத்திய பிரதேசத்தில் உள்ள தேவாஸ் அரசு அச்சகத்தில் புதிய 100 ரூபாய் நோட்டுகள் அச்சிடும் பணிகள் துவங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
புதிய 100 ரூபாய் நோட்டில் பல மைக்ரோ பாதுகாப்பு அம்சங்கள் இருக்கும் என்றும் இந்த ரூபாய் நோட்டுகளை ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் ஆர்பிஐ புழக்கத்திற்குக் கொண்டு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஊதா நிறம்
மேலும் புதிய 100 ரூபாய் நோட்டு ஊதா நிறத்தில் இருக்கும் என்றும், புதிய நோட்டால் பழைய ரூபாய் நோட்டுகளுக்கு எந்தப் பாதிப்பும் கிடையாது என்றும் எப்போது போலப் பயன்படுத்தலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
அளவு
புதிய ரூபாய் நோட்டு பழைய நோட்டு பொன்று இல்லாமல் புதிய 10 ரூபாய் நோட்டினை விடச் சற்றுப் பெரியதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஏடிஎம் இயந்திரங்கள்
எனவே வங்கிகளுக்கு மீண்டும் ஏடிஎம் இயந்திரங்களை மாற்றி அமைக்கும் நிலைக்குத் தள்ளப்படும் அபாயமும் உள்ளது.
ராணி கி வாவ்
ஒவ்வொரு ரூபாய் நோட்டிலும் ஒரு படம் இருப்பது போன்று புதிய ரூபாய் நோட்டுகளில் குஜராத்தில் உள்ள ராணி கி வாவ் படம் பொறிக்கப்பட்டு இருக்கும் என்றும் கூறப்படுகிறது.