இந்தியாவில் விமான நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு சலுகைகளை அளித்து வரும் அதே நேரம் தேவை அதிகமாக உள்ள நேரங்களில் (பீக் ஹவர்ஸ்) விமானக் கட்டணங்களைக் கூடுதலாக வசூலிக்க, இந்திய விமானப் போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது.
அதற்கான முன்வரைவுகளையும் தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்று தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
விமான நிலையங்களில் நெரிசல்
பயணிகள் அதிக அளவில் விமானப் போக்குவரத்தை விரும்பத் தொடங்கியுள்ளதால், இந்திய விமான நிலையங்களில் எப்போதும் இல்லாத அளவுக்கு நெரிசல் அதிகரித்துள்ளது. சில விமான நிலையங்கள் அதனுடைய போக்குவரத்துத் திறனைத் தாண்டி பொதுமக்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனால் நெரிசலும், அசாதாரணமான அலைக்கழிப்புகளும் ஏற்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் விமானப் பயணிகளின் எண்ணிக்கை 6 மடங்கு உயர்ந்துள்ளதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
வெளிநாடுகளில் கட்டண உயர்வு
அமெரிக்கா, பிரிட்டன் போன்ற மேலை நாடுகளில் பொதுமக்களின் தேவை அதிகரிக்கும் நேரங்களில், விமானப் பயணத்துக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனை முன்னுதாரணமாகக் கொண்டு இந்தியாவிலும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
விமானக் கட்டண வருவாய்
தற்போது சராசரியான அளவிலேயே விமானக் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வருகிறது. கூட்டம் அதிகம் உள்ள நேரங்கள், தேவை அதிகரிக்கும் காலங்கள் எனக் கணக்கிட்டுக் கட்டணம் நிர்ணயிக்கப்படுவதில்லை. இது தவிரத் தரை இறங்கும் விமானங்களுக்குக் குறிப்பிட்ட அளவு வரி விதிக்கப்படுகிறது.
கட்டண உயர்வு- முடிவு
வருவாயை மேலும் உயர்த்தும் நோக்கத்தில் கட்டணத்தை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. தேவை அதிகமாக உள்ள நேரங்களில் கட்டணத்தை உயர்த்துவதற்கான வரைவுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த முன்மொழிவுகளுக்கு ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் கட்டண உயர்வு நடைமுறைக்குக் கொண்டுவரப்படும்
உலகளாவிய கட்டண விதிப்பு முறைகளை அடிப்படையாகக் கொண்டு, முன்வரைவுகளைத் தயாரித்ததுள்ளதாக ஏ.ஏ.ஐ சேர்மன் குருபிரசாத் மல்பத்ரா தெரிவித்தார்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!



Click it and Unblock the Notifications