நுகர்வோர் விலை குறியீடு எனப்படும் பணவீக்கம் உயரும் போது எல்லாம் மத்திய அரசு அதன் ஊழியர்கௌக்கு அகவிலைப்படியினை உயர்த்துவது வழக்கம். அப்படித் தற்போது இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் அதிகரித்துக்கொண்டே செல்லும் நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 முதல் 7 சதவீதம் வரை இடத்திற்கு ஏற்றார் போல அகவிலைப்படியினை உயர்த்தி அளிக்க முடிவு செய்துள்ளது.
பணவீக்கம்
மக்கள் வாழ்வதற்கான செலவுகள் அதிகரிக்கும் போது இந்த அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. பணவீக்கம் உயர்வதைப் பொருத்து இந்த அகவிலைப்படி உயர்வும் இருக்கும். உதாரணத்திற்கு 7 சதவீதம் பணவீக்கம் என்றால் இன்று உங்களிடம் 1,00,000 ரூபாய் பணம் இருக்கிறது என்றால் 30 வருடத்திற்குப் பிறகு அதன் மதிப்பு 13,000 ரூபாயாகக் குறைந்து இருக்கும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி எப்படிக் கணக்கிடப்படுகிறது?
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி பின்வரும் சூத்திரத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
அகவிலைப்படி%= ((Average of AICPI (Base Year 2001=100) for the past 12 months -115.76)/115.76)*100
பொதுத் துறை நிறுவன ஊழியர்கள்
பொதுத் துறை நிறுவன ஊழியர்களுக்கு அகவிலைப்படி எப்படிக் கணக்கிடப்படுகிறது?
அகவிலைப்படி%= ((Average of AICPI (Base Year 2001=100) for the past 12 months -115.76)/115.76)*100
தொழிலாளர் அமைச்சகம்
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தற்கு அதற்கான ஆலோசனை குழுவில் இருந்து அனுமதி பெற வேண்டும். தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்துள்ள தகவலின் படி அகவிலைப்படி உயர்வுக்கான அனுமதி விரைவில் அளிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.