தமிழக அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் போது, ரயிகளில் பயணச் செய்யும் போது எல்லாம் இந்த மூட்டை பூச்சிகள் உள்ளதைப் பார்த்து இருப்போம். ஆனால் இந்தியாவின் மகாராஜா என அழைக்கப்படும் ஏர் இந்தியா விமானத்தின் பிஸ்னஸ் கிளாஸ் பயணத்தின் போது மூட்டைப் பூச்சு இருப்பதாகப் பயணி அளித்துள்ள புகார் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
அமெரிக்காவின் நீவார்க் பகுதியில் இருந்து மும்பைக்கு 17 மணி நேர பயணம் செய்யும் போது இந்த மூட்டைப் பூச்சிகள் பயணிகளைக் கடித்ததாகப் புகார் எழுந்துள்ளது.
பயணம் மற்றும் கட்டணம்
ஏர் இந்தியா விமானத்தில் தனது குழந்தையுடன் பிஸ்னஸ் வகுப்பில் 2 லட்சம் கட்டணம் செலுத்தி பயணம் செய்யும் போது தனது குழந்தை ஏதோ கடிக்கிறது எனக் கூற, ஆடைகளைக் கிளற்றி பார்க்கும் போது பல இடங்களில் இந்த மூட்டை பூச்சி கடித்து இருப்பது தெரியவந்துள்ளது.
டிவட்டர் பதிவுக்குப் பதில் இல்லை
விமானத்தில் மூட்டை பூச்சி இருந்தது குறித்துக் கோபம் அடைந்த பயணி பிரதமர் மற்றும் விமானப் போக்குவரத்துத் துறையினை டேக் செய்து டிவிட்டரில் பதிவிட்டும் அதற்கு எந்தப் பதிலும் கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
முதன் முறை அல்ல
ஏர் இந்தியா விமானத்தில் இது போன்ற புகார்கள் வருவது முதல் முறை அல்ல. இது போன்று பல முறை மூட்டைப் பூச்சி புகார்கள் எழுந்த நிலையிலும் அதனை ஏர் இந்தியா ஒரு பொருட்டாகவே மதித்ததும் இல்லை என்று கூறுகின்றனர்.
இண்டிகோ
அன்மையில் இண்டிகோ நிறுவனத்தில் அடிக்கடி கொசு கடிக்கிறது என்று புகார்கள் எழுந்த நிலையில் பயணிகளுக்குக் கொசு அடிக்கும் பேட் ஒன்றைத் தேவைப்படும் அளிக்க முடிவு செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.