துத்துக்குடியில் இருக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூடப்பட்டதால் வேதாந்தா குழுத்திற்கு வருடம் 100 மில்லியன் டாலர் நஷ்டம் அடையும் என வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் தெரிவித்துள்ளார்.
ஸ்டெர்லைட்
ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து தூத்துக்குடி மக்கள் நடத்திய மிகப்பெரிய போராட்டத்தில் தமிழ்நாட்டுக் காவல்துறை நடத்திய துப்பாக்கி சுடு நடத்தியது, இதில் சுமார் 13 அப்பாவி மக்கள் இறந்தனர். இதனைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையைத் தமிழக அரசு மூடியது மட்டும் அல்லாமல் இத்தொழிற்சாலைக்கு மின்சார இணைப்பை துண்டித்தது. இதன் தொழிற்சாலை மே மாதத்தில் இருந்து முற்றிலும் முடங்கியது.
வேதாந்தாவின் மனு
தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடப்பட்டதால் இந்நிறுவனம் இந்திய சுற்றுச்சூழல் நீதிமன்றத்தில் நிரந்த தீர்வு மற்றும் இழப்பீடு அளிக்க வேண்டும் என மாநில அரசுக்கு எதிராக மனு அளித்துள்ளது.
2% வருவாய்
வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் ஆலையில் கிடைக்கும் வருவாய் அளவு சுமார் 2 சதவீதம். இந்நிலையில் ஸ்டெர்லைட் தொழிற்சாலை ஒரு வருடமும் முழுவதும் மூடப்பட்டு இருந்தால் இக்குழுமம் சுமார் 100 மில்லியன் டாலர் அளவிலான நஷ்டத்தை அடையும்.
லண்டன் பங்குச்சந்தை
இந்நிலையில் லண்டன் பங்குச்சந்தையில் இருக்கும் வேதாந்தா நிறுவனத்தைப் பங்குச்சந்தையில் இருந்து நீக்க திட்டமிட்டு வரும் நிலையில், இந்தியாவில் ஹைட்ரோகார்பன், மெட்டல் மற்றும் சுரங்கம் ஆகிய துறையில் புதிய வர்த்தகத்தை அடைய ஆர்வம் காட்டி வருகிறது.
பங்கு மதிப்பு
இன்றைய வர்த்தக முடிவில் வேதாந்தா நிறுவனத்தின் பங்கு மதிப்பு 2.50 சதவீதம் குறைந்து 203 ரூபாய்க்குப் பொதுச் சந்தையில் வர்த்தகம் செய்யப்படுகிறது.