பெங்களூருவைச் சேர்ந்த பொறியியல் மாணவர் ஒருவர் தன்னை ஏமாற்றிப் போலி ஐபோன் எக்ஸ் போன்களை விற்றதாக டெல்லியைச் சேர்ந்த டிபரண்ட் கலக்ஷன் மற்றும் Nexafation.com என்ற இரு நிறுவனங்கள் மற்றும் பிக்பாஸ் புகழ் பாண்டகி கல்ரா மீதும் புகார் அளித்ததன் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டு நிறுவனங்களுக்கும் விளம்பர தூதராகப் பாண்டகி கல்ரா இருந்துள்ளார்.
இன்ஸ்டாகிராம்
மாரத்தள்ளியில் பொறியியல் வசித்து வரும் யுவராஜ் சிங் யாதவ் பாண்டகி கல்ராவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரண்டு பிராண்டு நியூ ஐபோன் எக்ஸ் போனை 61,000 ரூபாய்க்கு விற்பதாக விளம்பரம் செய்துள்ளார். இதனைப் பார்த்த யுவராஜ் முதலீல் பேடிஎம் மூலம் 13,000 அட்வான்ஸ் தொகையினைச் செலுத்தி மொபைல் போனை புக் செய்துள்ளார்.
ப்ளூடார்ட் கொரியர் - போலி போன்
சென்ற புதன்கிழமை யுவரஜ்-க்கு ப்ளூடார்ட் கொரியர் மூலம் போன்கள் வந்து சேர மீத தொகையினைச் செலுத்திவிட்டு அதனைப் பெற்ற பிறகு திருந்து பார்த்த போது அவை போலி ஐபோன் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
பதில் இல்லை
பின்னர் இரண்டு நிறுவனங்கள் மற்றும் பாண்டகி கல்ராவையும் அவர்கள் அளித்த போன் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி போன்றவற்றைத் தொடர்பு கொண்ட போது எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.
பாண்டகி கல்ரா
பாண்டகி கல்ராவின் இன்ஸ்டாகிராம் கணக்கு போலி அல்ல என்பதை உறுதி செய்த காவல் துறையினர் டிபரண்ட் கலக்ஷன் மற்றும் Nexafation.com என்ற இரு நிறுவனங்கள் மற்றும் பிக்பாஸ் புகழ் பாண்டகி கல்ரா உள்ளிட்டவர்களை விசாரணை செய்ய டெல்லி விரைந்துள்ளனர்.
மிரட்டல்
அவர்கள் மீது புகார் அளித்தை வாப்பஸ் பெற வேண்டும் என்றும் பின்னர் நீ தான் எங்களைப் பிளாக்மெயில் செய்தான் என்று நாங்களும் புகார் அளிப்போம் என்றும் யுவராஜினை மிரட்டியுள்ளனர். இந்தப் போனை வாங்க இவர் பலரிடம் கடனாகப் பணத்தினைப் பெற்றதாகவும் கூறுகிறார்.


Click it and Unblock the Notifications