பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடிகளை மோசடி செய்த மெஹூல் சோக்சி இந்தியாவை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் தலைமை மறைவாக வாழ்ந்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாக இருந்தாலும் அவர் எங்கு உள்ளார் என்பது யாருக்கும் தெரியாத விஷயமாகவே இருந்து வருகிறது.
தற்போது மெஹூல் சோக்சி எங்கு உள்ளார் எனத் தகவல் கிடைத்துள்ளது.
கரிபியன் நாடுகள்
மெஹூல் சோக்சி அமெரிக்காவில் இருந்து வெளியேறி கரிபியன் நாடுகளில் ஒன்றான அன்டிகுவா தீவில் பாஸ்போர்ட் உடன் வாழ்ந்து வருவது தெரிய வந்துள்ளது.
அன்டுகுவா தீவு
அமலாக்க துறைக்கு இன்டர்போல் வெளியிட்டுள்ள தகவல்கள் படி, சோக்சி கடந்த மாதம் அன்டுகுவா தீவிற்கு வந்ததாகவும், அந்நாடு பாஸ்போர்ட் பெற்றுள்ளதாகவும் இத்தீவின் அரசு அமைப்பு தெரிவித்துள்ளது.
12,000 கோடி ரூபாய்
பிஎன்பி வங்கியில் நீரவ் மோடி மற்றும் மெஹூல் சோக்சி ஆகியோர் செய்த 12,000 கோடி ரூபாய் மோசடி வெளியாகும் ஒரு வாரத்திற்கு முன்னர் அதாவது ஜனவரி மாதம் முதல் வாரத்தில் இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளார் மெஹூல் சோக்சி.
உத்தரவு
மும்பை நீதிமன்றம் இருவரையும் கைது செய்யவும், மீண்டும் இந்தியாவிற்கு மீண்டும் அழைத்து வரவும் உத்தரவிட்டுள்ள நிலையில், சிபிஐ, அமலாக்கத் துறை ஆகியவை இன்டர்போல் அமைப்பு உடன் இணைந்து இருவரையும் தேடும் பணியில் இயங்கியுள்ளது.