பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடிகளை மோசடி செய்த மெஹூல் சோக்சி இந்தியாவை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் தலைமை மறைவாக வாழ்ந்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாக இருந்தாலும் அவர் எங்கு உள்ளார் என்பது யாருக்கும் தெரியாத விஷயமாகவே இருந்து வருகிறது.
தற்போது மெஹூல் சோக்சி எங்கு உள்ளார் எனத் தகவல் கிடைத்துள்ளது.
கரிபியன் நாடுகள்
மெஹூல் சோக்சி அமெரிக்காவில் இருந்து வெளியேறி கரிபியன் நாடுகளில் ஒன்றான அன்டிகுவா தீவில் பாஸ்போர்ட் உடன் வாழ்ந்து வருவது தெரிய வந்துள்ளது.
அன்டுகுவா தீவு
அமலாக்க துறைக்கு இன்டர்போல் வெளியிட்டுள்ள தகவல்கள் படி, சோக்சி கடந்த மாதம் அன்டுகுவா தீவிற்கு வந்ததாகவும், அந்நாடு பாஸ்போர்ட் பெற்றுள்ளதாகவும் இத்தீவின் அரசு அமைப்பு தெரிவித்துள்ளது.
12,000 கோடி ரூபாய்
பிஎன்பி வங்கியில் நீரவ் மோடி மற்றும் மெஹூல் சோக்சி ஆகியோர் செய்த 12,000 கோடி ரூபாய் மோசடி வெளியாகும் ஒரு வாரத்திற்கு முன்னர் அதாவது ஜனவரி மாதம் முதல் வாரத்தில் இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளார் மெஹூல் சோக்சி.
உத்தரவு
மும்பை நீதிமன்றம் இருவரையும் கைது செய்யவும், மீண்டும் இந்தியாவிற்கு மீண்டும் அழைத்து வரவும் உத்தரவிட்டுள்ள நிலையில், சிபிஐ, அமலாக்கத் துறை ஆகியவை இன்டர்போல் அமைப்பு உடன் இணைந்து இருவரையும் தேடும் பணியில் இயங்கியுள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications