ஐதராபாத்தில் தொலைத் தொடர்பு நிறுவனத்தில் பணியாற்றும் பெண் ஒருவர் 9 கோடி ரூபாயை வருமான வரியாகச் செலுத்தி வருகிறார். ஆண்டுக்கு 30 கோடி ரூபாய் சம்பளம் பெறும் அவர், ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களிலேயே அதிக வரிச் செலுத்துபவராகக் கருதப்படுகிறார்.
ரூ.9 கோடி வருமானவரி செலுத்தும் பெண்
தேசிய அளவில் அதிகபட்ச வரி செலுத்துபவராக இருக்கும் அந்தப் பெண், அதிகமாக வருமானவரி செலுத்துவோர் பட்டியலில் இடம்பெறவில்லை என்று, ஆந்திரா மற்றும் தெலுங்கான மாநிலங்களின் வருமானவரித்துறை தலைமை ஆணையர் எஸ்.பி.சௌத்ரி கூறியுள்ளார்.
தெலுங்குதேசம் எம்.பி முதலிடம்
திருப்பதியைச் சேர்ந்த அமர ராஜா பேட்டரி நிறுவனத்தின் உரிமையாளரும், தெலுங்குதேச நாடாளுமன்ற உறுப்பினருமான கல்லா ஜெயதேவ் மற்றும் அவரது தந்தை கல்லா ராமச்சந்திர நாயுடு விஜயவாடா பிராந்தியத்தில் அதிக அளவில் வருமான வரிச் செலுத்துகின்றனர். கடந்த இரண்டு வருடங்களாக ஆந்திராவிலேயே இவர்கள்தான் அதிகமாக வரி செலுத்தி வருகின்றனர். வருமானவரி நாள் விழாவிற்கு ராமந்திரநாயுடு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுக் கௌரவிக்கப்படுவார் என்று சௌத்ரி கூறினார்.
பொதுத்துறை நிறுவனத்துக்கும் இடம்
பொதுத்துறை நிறுவனமான கனிமவள மேம்பாட்டுக் கழகம், ஆந்திரா வங்கிக்கு அடுத்தபடியாக அதிகமாக வரிச் செலுத்துகிறது. கிராமீனா வங்கி ஆந்திராவில் அதிக வரிச் செலுத்தும் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
ஆனால் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது தெலுங்கு பேசும் மாநிலங்களில் வருமானவரி 7.41 லட்சம் குறைவாகி விட்டதாக அவர் தெரிவித்தார்.