ஊதிய உயர்வு குறித்து இந்திய வங்கிகள் சங்கத்துடன், தொழிற்சங்கங்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. 6 சதவீத ஊதிய உயர்வை ஏற்க மறுத்ததால், 14 வது சுற்று பேச்சுவார்த்தை ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோரிக்கை -25 விழுக்காடு உயர்வு
பொதுத்துறை, தனியார் மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த 37 வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்கள் ஊதிய ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. கடந்த மே மாதம் இது தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 25 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் எனக் கோரிக்கையை முன் வைத்தனர். இதனை ஏற்றுக்கொள்ள மறுத்த இந்திய வங்கிகள் சங்கம் 2 சதவீதம் தருவதாகக் கூறியது.
வேலை நிறுத்தம்
இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் 2 நாள் வேலை நிறுத்தத்தைக் கடந்த மே 30 ஆம் தேதி தொடங்கினர். இதனைத் தொடர்ந்து வங்கி ஊழியர் சங்கம் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது.
உடன்பாடு இல்லை
அதன்படி இருதரப்புக்கும் இடையே நேற்று 13 வது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. பலமணி நேரம் நீடித்த மாரத்தான் பேச்சு வார்த்தையில் 6 சதவீதம் வழங்குவதாக இந்திய வங்கிகள் சங்கம் அறிவித்தது. இதனை அகில இந்திய வங்கிகள் கூட்டமைப்பு ஒப்புக்கொள்ள மறுத்ததால் உடன்பாடு எட்டவில்லை.
பிடிவாதம்- மீண்டும் பேச்சு
இரட்டை இலக்கத்தில் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பதில் தொழிற் சங்கங்கள் விடாப்பிடியாக உள்ளன. இதனால் மீண்டும் ஆகஸ்ட் மாதம் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்வதாக அகில இந்திய தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications