ஜிஎஸ்டி கவுன்சிலின் 29வது கூட்டம் இன்று நடைபெற்று வந்த நிலையில் பிம் யூபிஐ மற்றும் ரூபே கார்டுகள் வழியாகப் பணம் செலுத்துபவர்களுக்கு டிஜிட்டல் பரிவர்த்தனையினை ஊக்குவிக்க வரித் தொகையில் 20 சதவீதம் கேஷ்பேக் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கேஷ்பேக்
சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி-ல் சீர்திருத்தங்களைக் கொண்டு வர அமைக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தினைத் தலைமை தாங்கி நடத்தி வந்த பியூஷ் கோயல் பிம் யூபிஐ மற்றும் ரூபே கார்டுகள் பயன்படுத்தி டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துபவர்களை ஊக்குவிக்கும் சோதனை முயற்சியாக 100 ரூபாய் வரை வரித் தொகையில் கேஷ்பேக் அளிக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அமைச்சர்கள் குழு ஒப்புதல்
டிஜிட்டல் முறையில் வரி செலுத்தும் போது கேஷ்பேக் வழங்குவது குறித்து அமைச்சர்கள் குழுவிற்குத் தெரிவித்து அனுமதிகளைப் பெற்ற பிறகு பிம் செயலி மற்றும் ரூபே கார்டுகளுக்கு மட்டும் கேஷ்பேக் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
எவ்வளவு கேஷ்பேக் கிடைக்கும்?
எனவே நாம் எந்த ஒரு பொருட்களை வாங்கும் போதும் அதற்கு 500 ரூபாய் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என்றால் பிம் யூபிஐ செயலி அல்லது ரூபே கார்டுகள் பயன்படுத்திக் கட்டணம் செலுத்தும் போது 100 ரூபாய் கேஷ்பேக் கிடைக்கும். இந்தச் சேவை எவ்வளவு சிறப்பாகச் செயல்பட்ட உள்ளது என்பது மாநிலங்களின் கைகளில் தான் உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.
சோதனை முயற்சி
சோதனை கேஷ்பேக் திட்டம் வெற்றி பெற்றால் பிற கார்டுகள் மற்றும் டிஜிட்டல் முறையில் பொருட்கள் வாங்கி அதற்கு வரிச் செலுத்தும்பட்சத்தில் அவர்களுக்குக் கேஷ்பேக் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். அதே நேரம் சில மாநிலங்கள் இந்தக் கேஷ்பேக் சேவையால் வரி வருவாய்ப் பாதிக்கப்படும் என்று ஒப்புக்கொள்ளவில்லை என்றும் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications