சென்ற ஆண்டுப் பெட்ரோலில் எத்தானாலினை சேர்த்துப் பயன்படுத்தியதை அடுத்து இந்திய அரசுக்கு அந்நிய செலாவணியில் 4,000 கோடி ரூபாய் வரை சேமிப்புக் கிடைத்துள்ளதாக வெள்ளிக்கிழமை பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அடுத்த 4 ஆண்டுகளில் பெட்ரோலிய பொருட்களில் எத்தனாலினை சேர்ப்பதன் மூலம் 12,000 கோடி ரூபாய் வரை சேமிக்க முடியும் என்றும் உலக உயிரி எரிபொருள் தினத்தன்று மோடி குறிப்பிட்டுள்ளார்.
மோடி உரை
விவசாயிகள், விஞ்ஞானிகள், தொழில் முனைவோர், மாணவர்கள், அரசாங்க அதிகாரிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் பேசிய மோடி எத்தனாலை பெட்ரோலிய பொருட்களில் சேர்ப்பதன் மூஅம் அந்நிய செலாவணி மட்டும் இல்லாமல் சுற்று சூழலுக்குப் பாதுகாப்பானது என்று கூறியுள்ளார்.
எத்தனால்
மத்திய அரசு பெட்ரோலிய பொருட்களில் 2022-ம் ஆண்டுக்குள் 10 சதவீதம் அளவிலான எத்தனாலினை சேர்த்துப் பயன்படுத்த முடிவு செய்துள்ளது.
விவசாயி & வேலை வாய்ப்பு
பையோ ஃபியூல் எனப்படும் உயிரி எரிபொருளை பயன்படுத்துவதன் மூலம் விவசாயிகளின் வருவாயினை அதிகரிப்பது மட்டும் இல்லாமல் அதிக வேலை வாய்ப்பு உருவாகும் என்றும் மோடி கூறியுள்ளார்.
எத்தனால் பயன்பாடு அதிகரிப்பு
மத்திய அரசு 2013-2014 நிதி ஆண்டில் 38 கோடி லிட்டர் எத்தனாலினை பெட்ரோலிய பொருட்களைப் பயன்படுத்திய நிலையில் 2017-2018 நிதி ஆண்டில் 141 கோடி லிட்டராக அதிகரித்துள்ளது. அது மட்டும் இல்லாமல் பையோ ஃபியூலுக்கான தேசிய கொள்கையினை 2018 ஜூன் மாதம் இயற்றியுள்ளது என்றும் மோடி நினைவு கூர்ந்தார்.
பையோ ஃபியூல் தினமானது
ஒவ்வொரு ஆண்டும் உலகப் பையோ ஃபியூல் தினமானது ஆகஸ்ட் 10 தேதி நடைபெறுகிறது. இதன் மூலம் உலகம் முழுவது உயிரி எரிபொருளினை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்திவருகின்றனர்.
இலக்கு
2030-ம் ஆண்டுக்குள் பெட்ரோலிய பொருட்களில் 20 சதவீதம் வரை எத்தனாலினை பயன்படுத்த முடிவு செய்துள்ளது மட்டும் இல்லாமல் 5 சதவீதம் வரை பையோ டீசல் பயன்பாட்டினை அதிகரிக்கவும் முடிவு செய்துள்ளனர். இதற்குப் பையோ ஃபியூள் கொள்கை முக்கியப் பங்கினை வகிக்கும்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!



Click it and Unblock the Notifications