இந்தியாவையே அதிரவைத்த பஞ்சாப் நேஷனல் வங்கியில் நீரவ் மோடி மற்றும் மெஹூல் சோக்சி ஆகியோர் செய்ய 14,000 கோடி ரூபாய் மோசடியில் தொடர்புடைய இவ்வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குனரும், தற்போதைய அலகாபாத் வங்கி நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியுமான உஷா அனந்தசுப்பிரமணியன் மத்திய அரசின் உத்தரவின் படி பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
3 மாதம்
இந்த மோசடியில் உஷாவின் தலையீடு இருப்பதாகச் சிபிஐ குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில் அலகாபாத் வங்கி பணிகளில் இருந்து 3 மாதங்களுக்கு முன்னதாகவே வெளியேற்றப்பட்டுப் பெயருக்கு தலைவராக மட்டுமே உஷா இருந்து வருகிறார்.
மத்திய அரசு
இந்நிலையில் தற்போது மத்திய அரசு உத்தரவின் பெயரில் இவ்வங்கி பணியில் இருந்து முழுமையாக வெளியேற்றப்பட்டுள்ளார் உஷா.
கடைசி நாள்
அனைத்திற்கும் மேலாக இன்று உஷா அனந்தசுப்பிரமணியன் ஓய்வு பெற உள்ளார், அதாவது வங்கி பணியில் அவரது கடைசி வேலை நாள் இன்று தான்.
ஆனால் கடைசி நாளில் உஷா பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளது வங்கித்துறை அதிகாரிகள் மத்தியில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அனுமதி
மேலும் மத்திய அரசு தற்போது சிபிஐ அமைப்பிற்கு உஷா அனந்தசுப்பிரமணியன் மற்றும் பிஎன்பி வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குனர் சஞ்ஜீவ் சரண் ஆகியோரை விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளது.
34 வருடம்
உஷா அனந்தசுப்பிரமணியன் சுமார் 34 வருடமாக வங்கித்துறையில் பணியாற்றி வருகிறார்.
பஞ்சாப் நேஷனல் வங்கி, அலகாபாத் வங்கி மட்டும் அல்லாமல் பாரதிய மஹிளா வங்கியின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
முதல் பெண் தலைவர்
2018ஆம் ஆண்டில் துவக்கத்தில் உஷா அனந்தசுப்பிரமணியன் இந்திய வங்கி அமைப்புகளின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதிலும் இந்த 71 வருட அமைப்பின் முதல் பெண் தலைவரும் இவர் தான்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications