தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் பட்டியலின மாணவர்களுக்குக் குடிமைப்பணி தேர்வுகளில் முன்னுரிமை வழங்கப்படும் என அறிவித்துள்ள பீகார் மாநில முதலமைச்சர் நிதீஷ்குமார், தேர்வு எழுதுவதற்கு வசதியாக வெகுமதிகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
கூடிய விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களின் நலனில் அக்கறை செலுத்தும் விதமாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பீகார்
அரசு அலுவலகங்களில் காலியான இடங்களின் விவரங்கள், பீகார் மாநில சர்வீஸ் கமிஷன் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பஞ்சாயத்து அதிகாரிகள் மற்றும் 7 நகர நிர்வாக அதிகாரிகளுக்கான இடங்கள் காலியாக இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை ஆகஸ்டு 20 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு வெகுமதி
மாநில தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள் மற்றும் குடிமைப்பணி தேர்வுகளில் தாழ்த்தப்பட்ட மாணவர்களை ஊக்கப்படுத்தும் முயற்சியைப் பீகார் மாநில அரசு தொடங்கியுள்ளது. பீகார் சர்வீஸ் கமிஷன் தேர்வுகளில் பங்கேற்கும் தகுதி உள்ள மாணவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும், குடிமைப் பணி தேர்வில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு 1 லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என நிதீஷ்குமார் கூறியுள்ளார்.
பதவி உயர்வில் முன்னுரிமை
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களுக்கு இட ஒதுக்கீடு மற்றும் பதவி உயர்வுகளில் முன்னுரிமை வழங்கப்படும் எனப் பீகார் மாநில அரசு அறிவித்துள்ளது.
விளக்கம்
பதவி உயர்வுகளும், இடஒதுக்கீடுகளும் நீதிமன்ற ஆணைகளுக்கு உட்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, அரசின் உயர்மட்டக்குழுவின் பரிந்துரைப்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதீஷ்குமார் கூறியுள்ளார்.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications