டாடா மோட்டார்ஸ், மகிந்திரா அண்ட் மகிந்திரா உள்ளிட்ட கார்களின் விலைகள் ஏற்கனவே உயர்த்தப்பட்ட நிலையில், விலைவாசி விலை உயர்வு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காரணமாக இந்தியாவில் விற்பனையாகும் அனைத்து நிறுவனங்களின் கார்களுக்கும் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
பிரஞ்சு நாட்டைச் சேர்ந்த கார் உற்பத்தி நிறுவனமாக ரெனால்ட், விலைகளை மேலும் அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மாருதி சுசுகி விலை உயர்வு
மாருதி சுசுகி நிறுவனம் அனைத்து மகிழுந்துகளின் விலையில் 6,100 ரூபாய் அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு உடனடியாக அமுலுக்கு வருகிறது. விலை உயர்ந்த கார்களை தயாரித்து வரும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் செப்டம்பர் மாதம் முதல் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளது.
2 விழுக்காடு அதிகரிப்பு
டாடா மோட்டார்ஸ் மற்றும் மகிந்திரா அண்ட் மகிந்திரா நிறுவனங்கள் ஆகஸ்டு 1 ஆம் தேதியிலிருந்து கார்களின் விலையை உயர்த்தியுள்ளன. டாடா தனது அனைதது வகை கார்களுக்கும் 2 சதவீதம் விலையை அதிகரித்துள்ளது. மகிந்திரா அண்ட் மகிந்திரா நிறுவனம் 2 விழுக்காடு முதல் 30, 000 ரூபாய் வரை விலையை உயர்த்தியுள்ளது. ஹூண்டாய் நிறுவனம் ஐ டென் வகை கார்களுக்கு விலையை அதிகரித்துள்ளது.
போர்டு விலை எகிறியது
போர்டு நிறுவனம் 1 முதல் 3 விழுக்காடு வரை விலையை உயர்த்தியுள்ள நிலையில், ஹோண்டா நிறுவனம் தனது தயாரிப்புகளான அமேஷ், சிட்டி, பி.ஆர்.வி வகை கார்களுக்கு விலையை அதிகரித்தது.
மாற்றம் இல்லை
பி.எம்.டபிள்யூ, வால்வோ, வோல்க்ஸ் வேகன், டொயோட்டா உள்ளிட்ட கார்களின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.
காரணம் இதுதான்
இது தொடர்பாக பேசிய மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் செயல் அதிகாரி ரோலண்ட் போல்கர், சாதமில்லாத அந்நிய செலாவணி, பணவீக்கம் ஆகியவற்றின் காரணமாக விலை உயர்த்தப்பட்டதாக கூறினார். தற்போது நிலவும் ரூபாயின் வீழ்ச்சியும் இதற்கு காரணம் என்றார்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications