ஜூலை மாத ஜிஎஸ்டி ஆர் 3பி தாக்கல் தேதி ஆகஸ்ட் 24 வரை நீட்டிப்பு!
ஜிஎஸ்டி விற்பனை அறிக்கையான ஜிஎஸ்டி ஆர் 3பி படிவத்தினைத் தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதியினை மத்திய அரசு ஆகஸ்ட் 20-ம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 24 வரை நீட்டித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஜிஎஸ்டிஆர் 3 பி படிவத்தினைத் தாக்கல் செய்வதில் ஆகஸ்ட் 20-ம் தேதி நடைபெற்ற தொழில்நுட்ப கேளாரினை அடுத்து மத்திய அரசு இந்தக் காலக்கெடு முடிவினை எடுத்துள்ளது.
வரி தாக்கல் செய்வதற்கான தேதியை நீட்டித்தது சரியான முடிவு என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். ஜூன் மாதம் 95,610 கோடி ரூபாய் ஜிஎஸெஇ வரி வசூல் செய்யப்பட்டுள்ள நிலையில் ஜூலை மாதம் 96,483 கோடி ரூபாய் வசூல் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications