வங்கி தானியங்கி நடுவங்களில் பணம் நிரப்பும் தனியார் நிதிச் சேவை நிறுவனங்களுக்கு உள்துறை அமைச்சகம் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. நகர்ப்புறங்களில் இரவு 9 மணிக்கு மேலும், கிராமப்புறங்களில் 6 மணிக்கு மேலும் ஏ.டி.எம் எந்திரங்களில் பணம் நிரப்பக்கூடாது என எச்சரித்துள்ளது.
அடுத்த ஆண்டுப் பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாகத் தெரிவித்துள்ள உள்துறை அமைச்கம், விதிமுறைகளைக் கண்டிப்பாகக் கடை பிடிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
ரூ.15,000 கோடி
நாடு முழுவதும் தினந்தோறும் நிதிச் சேவை நிறுவனங்களின் 8 ஆயிரம் வேன்கள் பணம் நிரப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இதன் மூலம் ஒருநாளைக்கு 15000 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ரொக்கப்பணம் ஏ.டி.எம்களில் நிரப்பப்படுகின்றன. நள்ளிரவு நேரங்களிலும் பணம் நிரப்பப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
அசாதாரண நிகழ்வுகள்
வங்கிக் கொள்ளைகள் அதிகரித்துள்ள நிலையில், வாகனங்களை வழிமறித்துப் பணத்தைக் கொள்ளையடிக்கும் நிகழ்வுகளும் சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகின்றன. இதனைத் தடுக்கும் பொருட்டு உள்துறை அமைச்சகம் புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.
விதிமுறைகள்
நகர்ப்புறங்களில் 9 மணிக்கு மேல் பணம் நிரப்பக்கூடாது என நிதிச் சேவை நிறுவனங்களுக்கு எச்சரித்துள்ள உள்துறை அமைச்சகம், கிராமப்புறங்களில் 6 மணிக்கு மேல் நிரப்பக்கூடாது எனத் தெரிவித்துள்ளது. மேலும் நக்சலைட்டுகள் ஆதிக்கம் உள்ள பகுதிகளில் 4 மணிக்கு மேல் பணம் நிரப்பக்கூடாது என்றும், அதற்கான பணத்தை வங்கிகளிடம் முற்பகலுக்குள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது.
பாதுகாப்பு பணி
நிதிச் சேவை நிறுவனங்களின் வேன்களில் பயிற்சி பெற்ற 2 ஊழியர்கள், ஒரு டிரைவர், ஆயுதங்களைக் கொண்ட காவலர்கள் 2 பேர் இருக்க வேண்டும், காவலர்கள் ஆயுதங்களுடன் வேனின் முன்புறத்தில் அமர வேண்டும். உணவு மற்றும் தேநீர் வேளைகளின் போது கட்டாயம் ஒரு காவலர் வேனை பாதுகாக்க வேண்டும்.
ஜி.பி.எஸ் கருவி
பணம் கொண்டு செல்லும் நிதிச்சேவை நிறுவனங்களின் வாகனங்களில் ஜி.பி.எஸ் பொருத்த வேண்டும் என்றும், ஒரு தடவைக்கு 5 கோடி ரூபாய் மட்டும் எடுத்துச் செல்ல் வேண்டும்.
தீயணைப்பு உபகரணங்கள்
வேன்களில் சி.சி.டி.வி கேமராக்கள் இணைக்க வேண்டும். முன்பக்கம், மற்றும் பக்கவாட்டு மற்றும் உட்புறங்களில் பொருத்த வேண்டும். அவசர உதவிக்குப் பயன்படும் லைட் மற்றும் தீயணைப்பு உபகரங்கள் இருக்க வேண்டும்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications