கேரளாவில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய வெள்ளப்பெருக்கினை அடுத்து மத்திய அரசு அங்குக் கொண்டு செல்லப்படும் நிவாரணப் பொருட்களுக்கு அடிப்படை சுங்க வரி மற்றும் ஐஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிப்பதாகத் தெரிவித்துள்ளது.
அது மட்டும் இல்லாமல் கேரளாவில் உள்ள வணிக நிறுவனங்கள் தாக்கல் செய்ய வேண்டிய ஜிஎஸ்டிஆர் 3பி விற்பனை அறிக்கையினை ஜூலை 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்பதில் இருந்து காலக்கெடு நீட்டிக்கப்பட்டு 2018 அக்டோபர் 5-ம் தேதிக்குச் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.
மக்கள் நிலை
கேரளா வெள்ளத்தில் சிக்கி 370 நபர்களுக்கு அதிகமானவர்கள் இறந்துள்ளதாகவும், 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசு
வெள்ளப்பெருக்கிள் பாதிப்படைந்துள்ள கேரளாவிற்கு முதற்கட்டமாக 100 கோடி ரூபாய் நிதி அளித்த மத்திய அரசு இரண்டாம் கட்டஆக 500 கோடி ரூபாயினை அளித்துள்ளது.
ஐக்கிய அமீரகம்
அதே நேரம் ஐக்கிய அமீரக அரசு 700 கோடி ரூபாயினை நிவாரண நிதியாகக் கேரளாவுக்க அளிப்பதாகத் தெரிவித்த நிலையில் இந்தியாவில் 2004-ம் ஆண்டுக்குப் பிறகு அவ்வாறு ஒரு வெளிநாட்டில் இருந்து நிதியைப் பெற முடியாது என்றும் கூறப்படுகிறது.
பொது மக்கள்
மறு பக்கம் தனி நபர்கள், மக்கள் குழுக்கள், தொண்டு நிறுவனங்கள் கேரளாவில் பாதிக்கப்பட்டுள் மக்களுக்கு நிவாரணப் பொருட்களைக் கொண்டு சென்று குவித்து வருவது மட்டும் இல்லாமல் கேரள முதல்வரின் வெள்ள நிவாரண நிதி திட்டத்திற்கும் நேரடியாக அளித்து வருகின்றனர்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications