இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் நிறுவனம் தமிழ் நாட்டில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக 7,112 கோடி ரூபாயினை அடுத்த மூன்று ஆண்டுகளில் முதலீடு செய்ய உள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்துடன் பகிர்ந்துகொண்டார்.
ஐஓசி மட்டும் இல்லாமல் அதன் குழு நிறுவனமான சென்னை பெட்ரோலியம் கார்ப்ரேஷனும் இணைந்து தமிழ் நாட்டில் 37,112 கோடி ரூபாயினை முதலீடு செய்ய உள்ளது.
முதற்கட்ட முதலீடு
7,112 கோடி ரூபாய் முதலீடுகளானது பைப்லைன்களை அதிகப்படுத்துவது, கட்டுமான பணிகள், பெட்ரோல் மற்றும் டீசல் பொருட்களை நிர்வகிக்கக் கூடுதல் வசதிகள் போன்றவை அடங்கும்.
சென்னை பெட்ரோலியம் கார்ப்ரேஷன்
நரிமனம்மில் உள்ள சென்னை பெட்ரோலியத்திற்க்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் அளவினை 9 மில்லியன் டன்னாக அதிகரிக்க 30,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளனர்.
எரிவாயு விநியோகம்
அது மட்டும் இல்லாமல் இந்தியன் ஆயில் நிறுவனமானது சேலம் மற்றும் கோயம்புத்தூர் உள்ளிட்ட நகரங்களின் எரிவாயு விநியோக நெட்வொர்க்கிறாகவும் முதலீடு செய்ய உள்ளது.
என்னூர் எல்என்ஜி டெர்மினல்
என்னூர் எல்என்ஜி டெர்மினலில் இருந்து பல்வேறு இடங்களுக்குப் பைப்லைன் மூலம் பெட்ரோலிய பொருட்களைக் கொண்டு செல்வதற்கான பணிகள் ஏற்கனவே துவங்கப்பட்டுள்ளது.
மறுபக்கம் என்னூர் ல்என்ஜி டெர்மினல் திட்டத்திற்காக டிசம்பர் மாதம் கூடுதலாக 5,151 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
வேலை
இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் நிறுவனம் கோடி கணக்கில் தமிழ் நட்டில் முதலீடு செய்ய உள்ள நிலையில் அதன் மூலம் எவ்வளவு வேலை வாய்ப்புகள் உருவாகும் என்ற விவரங்களை தெரிவிக்கவில்லை.
More From GoodReturns

மார்ச் 31-க்குள் இந்த வேலையை செய்யாட்டி அக்கவுண்ட் முடங்கும்! முதலீட்டாளர்களே கவனம்?

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்! பெண்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் இதோ!

பங்குச்சந்தை ஏற்றத்தாழ்வு: முதலீட்டாளர்களுக்கு ஆபத்தா,அதிர்ஷ்டமா? SIP-யோடு லம்ப்சம் செய்யலாமா?

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:

ரூ. 50,000 கையில் இருக்கா..? உங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் முக்கிய முடிவு..!

EPF, NPS அல்லது PPF: நிம்மதியான ஓய்வுக் காலத்துக்கு நம்பர் 1 சாய்ஸ் எது?

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

மத்திய கிழக்கில் நீடிக்கும் போர்: நாளை இந்திய பங்குச்சந்தைகள் என்ன ஆகும்?முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?



Click it and Unblock the Notifications