கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காகப் பிரதமரின் தேசிய நிவாரண நிதி மற்றும் கேரள முதலமைச்சரின் துயர நிவாரண நிதியில் செலுத்தும் தொண்டு நிறுவனங்களின் நன்கொடைகளுக்கு 50 சதவிகித வருமான வரி தள்ளுபடி வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ள உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகள் ஆகியோரிடமிருந்து பெறும் பங்களிப்புக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
பிரதமரின் தேசிய நிவாரண நிதியை வங்கிகளில் நேரடியாகச் செலுத்தலாம் என்றும், [email protected] மூலமும் அனுப்பலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
வருமான வரி விலக்கு
அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும் வரி விலக்கு வழங்கப்படும் என்றும், வருமான வரிச்சட்டம் 80 ஜி பிரிவின்படி 50 சதவிகிதம் தள்ளுபடி கிடைக்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கேரள முதலமைச்சரின் துயர நிவாரண நிதிக்கு நன்கொடை அளிப்பவர்களுக்கு வருமான வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளது.
நன்கொடை தடையில்லை
சட்டம் மற்றும் உரிய வழிமுறைகளைப் பின்பற்றும்போது வெளிநாட்டில் உள்ள தனியார்கள் நன்கொடை அளிக்கத் தடையில்லை. அதேநேரம் இந்தியாவில் நிகழும் இயற்கைப் பேரழிவுகளுக்கு அயல்நாட்டு அரசாங்கங்கள் வழங்கிம நன்கொடைகளை அரசு ஏற்காது.
நிபந்தனைகள்
வெளிநாடுகளைச் சேர்ந்த தனிநபர்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தங்கள் பங்களிப்பைச் செய்யலாம். FCRA-வில் பதிவு செய்த அரசு சாரா நிறுவனங்களுக்கும் தடையேதும் கிடையாது
மத்திய அரசு மறுப்பு
உடனடியாக நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்குக் கேரள அரசு 2,000 கோடி ரூபாய் நிவாரண உதவிக் கோரியது. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரக அரசு அளித்த 700 கோடி ரூபாயை இந்திய அரசாங்கம் ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டது.
309 கோடி உதவி
வெள்ள நிவாரணப் பணிகளுக்கு மத்திய அரசு நேற்று ரூ .600 கோடி ரூபாயை விடுவித்தது.ஆன்லைன் மற்றும் வைப்புத்தொகை மூலம் 309 கோடி ரூபாய் வரை நன்கொடை கிடைத்துள்ளது.
இழப்பு
கேரள வெள்ளத்தில் 231 பேர் உயிரிழந்துள்ளதோடு,32 பேர் மாயமாகி விட்டதாகப் பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.3879 முகாம்களில் 14.50 லட்சம் மக்கள் தங்கியுள்ளனர்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications