உலகம் முழுவதிலும் அதிகச் சம்பளம் பெறும் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் என்றால் பெரும்பாலும் அவர்கள் ஐடி துறையில் தா இருப்பார்கள். அப்படி இந்தியாவின் டாப் ஐடி நிறுவன தலைமை செயல் அதிகாரிகளில் யாருடையைச் சம்பளம் அதிகம் என்று வியாழக்கிழமை தகவல் வெலியானது.
இந்தப் பட்டியலில் முதன் முறையாக எச்சிஎல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான விஜயகுமார் முதல் இடம் பிடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். எனவே பிற ஐடி நிறுவன தலைவர்களின் சம்பளம் மற்றும் பிற விவரங்களை இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.
விஜயகுமார்
எச்சிஎல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான விஜயகுமார் 2016-ம் ஆண்டு இந்தப் பதவியினை ஏற்கும் போது 7.06 கோடி ரூபாய் சம்பளம் பெற்று வந்த நிலையில் 2017-2018 நிதி ஆண்டில் இவரது சம்பளம் ஆண்டுக்கு 33.13 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஆனால் இது முழு ஆண்டுச் சம்பளம் இல்லை. எனவே வரும் ஆண்டு இவரது சம்பளம் பல அடங்கு அதிகரிக்கும்.
இந்தியாவின் டாப் 4 ஐடி நிறுவனங்களில் இவரது சம்பளம் தான் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜேஷ் கோபிநாதன்
டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ராஜேஷ் கோபிநாதன் அவர்கள் ஆண்டுக்கு 12 கோடி ரூபாயினைச் சம்பளமாகப் பெற்று வருகிறார்.
சலில் பாரேக்
இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உள்ள சலில் பாரேக்-க்கு 34.45 கொடி ரூபாய் ஆண்டுச் சம்பளம் என்றும் தரவுகள் கூறுகின்றன.
அபிதாலி நீமுச்வாலா
விப்ரோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான அபிதாலி நீமுச்வாலாவின் சம்பள 2018 நிதி ஆண்டில் 34 சதவீதம் உயர்ந்து 18.2 கோடி ரூபாயாக உள்ளது.
சிபி குருஞானி
டெக் மஹிந்தராவின் தலைமை செயல் அதிகாரியான சிபி குருஞானியின் சம்பளம் 2017-2018னிதி ஆண்டில் 146.19 கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது.
ஷிவ் நாடார்
எச்சிஎல் நிறுவன தலைவரான ஷிவ் நாடார் 2017-2018 நிதி ஆண்டில் அதற்கு முந்தைய ஆண்டினை விட 66.25 சதவீதம் குறைவாகவே சம்பளத்தினைப் பெற்றுள்ளார் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
அதிகக் கோடிஸ்வரர்கள்
இந்தியாவின் 3-ம் மிகப் பெரிய ஐடி நிறுவனமாக எச்சிஎல் நிறுவனம் வளர்ந்துள்ள நிலையில் 28 கோடீஸ்வர அதிகாரிகள் படைத்த நிறுவனமாகவும் உள்ளது.
More From GoodReturns

துபாய், சவுதி வாழ் இந்தியர்களுக்கு மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!! இந்த நம்பரை சேவ் பண்ணிக்கோங்க!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் தாக்குதல்: இந்தியர்களுக்கு பாதுகாப்பான இடம் தர மறுத்ததா இஸ்ரேல்? வைரலாகும் புகைப்படம்

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications