விமான எரிபொருள் விலை உயர்வால் இந்திய விமான நிறுவனங்கள் பெறும் அளவில் கடனில் சிக்கி தவித்து வரும் போது அதற்குத் தீர்வு கான ஸ்பைஸ்ஜெட் விமானப் போக்குவரத்து நிறுவனமானது திங்கட்கிழமை இந்தியாவின் முதல் பயோ ஃபியூல் விமானச் சோதனை ஓட்டத்தினை வெற்றிகரமாக நடத்தியது.
சோதனையில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் Q400 விமானம் பயோ ஃபியூல் மற்றும் விமான எரிபொருள் என்று இரண்டையும் கலந்து டேராடூனில் இருந்து டெல்லி விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்துள்ளது.
வரவேற்பு
பயோ ஃபியூல் விமானம் டேராடூனில் இருந்து டெல்லி விமான நிலையம் வந்து சேர்ந்த போது அதனை நித்தின் கட்காரி, சுரேஷ் பிரபு, தர்மேந்திர பிரதான், ஹர்ஷ் வர்தன் மற்றும் ஜெயந்த் சின்ஹா உள்ளிட்டவர்கள் வரவேற்று பூரிப்படைந்தனர்.
எளைட் கிளப்
இது வரை அமெரிக்கா மற்றும் ஆஸிதிரேலியாவில் மட்டுமே விமானப் போக்குவரத்தில் பயோ ஃபியூல் திட்டம் வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டுள்ள நிலையில் வளரும் நாடுகளில் இந்தியாவில் தான் முதலாவது ஆகும்.
உற்பத்தி
ஸ்பைஸ்ஜெட் விமானத்திற்கான இந்தப் பயோ ஃபியூல் எரிபொருளானது டேராடூனில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆ பெட்ரொலியம் உருவாக்கியுள்ளது. இந்த எரிபொருளினை விமானப் போக்குவரத்துத் துறை மற்றும் இந்திய ஆயில் நிறுவனம் இரண்டும் ஆய்வு செய்து அனுமதி அளித்துள்ளன.
சோதனை விமானம்
இது சோதனை விமானம் என்பதால் பயணிகள் யாரும் இதில் பயணிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதில் 75 சதவீத விமான எரிபொருளும், 25 சதவீதம் பயோ ஃபியூலும் சேர்க்கப்பட்டு இருந்தது.
கார்பன் உமிழ்வு குறையும்
விமான எரிபொருளில் பயோ ஃபியூல் சேர்க்கும் போது கார்பன் உமிழ்வு குறையும் என்றும் செலவுகள் குறையும் என்றும் பயணக் கட்டணம் குறையும் என்றும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான அஜய் சிங் தெரிவித்துள்ளார்.
உலகின் முதல் பயோ ஃபியூல் விமானம்
உலகின் முதல் பயோ ஃபியூல் விமானம் விர்ஜின் அட்லாண்ட்டிக் ஏர்லைன்ஸ் கீழ் லண்டன் - அம்ஸ்டெர்டம் இடையில் சோதனை செய்யப்பட்டு வெற்றிப் பெற்றது. சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கமானது உலகம் முழுவதும் இந்தப் பயோ ஃபியூல் விமானச் சேவையானது பயன்பாட்டிற்கு வர வேண்டும் 2015-ம் ஆண்டுத் தெரிவித்தது.
தோல்வி
இந்தியாவில் இதே போன்ற ஒரு முயற்சி 2010-ம் ஆண்டுச் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்யப்பட்டு அது தோல்வியில் முடிந்ததும் குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

துபாய், சவுதி வாழ் இந்தியர்களுக்கு மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!! இந்த நம்பரை சேவ் பண்ணிக்கோங்க!!

ஈரான் தாக்குதல்: இந்தியர்களுக்கு பாதுகாப்பான இடம் தர மறுத்ததா இஸ்ரேல்? வைரலாகும் புகைப்படம்

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!



Click it and Unblock the Notifications