சிவில் சப்ளைஸ் மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் ஜெயேஷ் ராதாதியா திங்கட்கிழமை ராஜோட் ஜேட்பூர் பகுதியில் உள்ள எஸ்பிஐ வங்கி கிளையில் பயிற் காப்பீட்டினை நீண்ட காலமாக விவசாயிகளுக்கு அளிக்காததால் இழுத்து மூடியுள்ளார்.
பாஜக எம்எல்ஏ மற்றும் அமைச்சரான ஜெயேஷ் ராதாதியா இவருடன் சில விவசாயிகளை அழைத்துச் சென்று பயிர் காப்பீட்டுப் பணத்தினை அளிக்குமாறு கேட்டுள்ளார். கோரிக்கை செயல்பாட்டில் உள்ளது என்று வங்கி அதிகாரிகள் கூறிய பதிலில் ஆத்திரம் அடைந்த இவர் வங்கி கிளையை இழுத்து மூடுமாறு உத்தரவிட்டுள்ளார்.
பின்னர் என்ன செய்வதென்று அரியாத ஊழியர்கள் வங்கி கிளையினை மூடிவிட்டுச் சென்றுள்ளது அந்தப் பகுதியில் பெறும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயேஷ் ராதாதியா
ஜெயேஷ் ராதாதியாவும் ராஜ்கோட் மாவட்ட கூட்டுறவு வங்கி ஒன்றை நடத்தி வருகிறார். 150 விவசாயிகள் பயிர் காப்பீட்டிற்கான பிரீமியம் தகையினைச் செலுத்தி இருந்த போதிலும் 2016-2017 நிதி ஆண்டுக்கான பயிற் காப்பீட்டுத் தொகையினைத் திருப்பி அளிக்காததால் கோபம் அடைந்து வங்கி கிளையினை இழுத்து மூடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
யார் பொறுப்பு?
பயிர் காப்பீட்டுத் தொகையினை வழங்குவதற்கு வங்கி அல்லது காப்பீட்டு நிறுவனம் தான் பொறுப்பு. இவர்கள் 10 மாதமாக விவசாயிகளுக்குக் காப்பீட்டுப் பணத்தினைத் திருப்பி அளிக்காததால் அவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அது எனது கடமை என ஜெயேஷ் ராதாதியா தெரிவித்துள்ளார்.
காப்பீடு தொகை
ஜேத்பூர் எஸ்பிஐ வங்கி கிளையில் 150 விவசாயிகளுக்கு 1.75 கோடி வரை காப்பீடு பணம் வழங்கப்பட வேண்டும். அது நீண்ட காலமாகத் தாமதமாகவே இருந்து வந்துள்ளது. அதே நேரம் அருகில் உள்ள கானாக்யா எஸ்பிஐ வங்கி கிளையில் பயிர் காப்பீடு பெற்றவர்களின் பணம் எல்லாம் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
கூட்டம்
எஸ்பிஐ வங்கி அதிகாரிகளுடன் 3 மாதத்திற்கு முன்பு நடைபெற்ற கூட்டம் ஒன்றில் தான் இது பற்றி விவாதித்த போது விரைவாகப் பயிர் காப்பீட்டினை வழங்குமாறு கோரிக்கை வைத்ததாகவும் ஆனால் அப்போது முதலே கோரிக்கைகள் செயல்பாட்டில் உள்ளது என்று காலம் தாழ்த்தி வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
வங்கி மேலாளர்
இது குறித்து அந்த எஸ்பிஐ வங்கி கிளையின் மேலாளரைத் தொடர்பு கொண்ட போது அமைச்சர் மீது எந்தப் புகாரும் காவல் நிலையத்தில் அளிக்கவில்லை என்றும் தான் விடுமுறையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications