லட்சக்கணக்கான இபிஎப் சந்தாதார்கள் வெகுவிரைவில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசின் விருப்ப திட்டமான மோடிகேர் எனப்படும் ஆயுஸ்மான் பாரத் திட்டத்தின் கீழ் பலனடைய உள்ளனர். மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் தகுதியுள்ள இபிஎப் சந்தாதார்களுக்கு ஆயுஸ்மான் பாரத் திட்டத்தின் பலன்களை வழங்குவது பற்றிச் சுகாதாரத் துறையுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மருத்துவக் காப்பீடு
இபிஎப் சந்தாதார்களுக்கு மருத்துவகாப்பீடு வழங்கப்படவேண்டும் என்பது நீண்டகாலக் கோரிக்கையாகும். இபிஎப் சந்தாதார்கள் ஆயுஸ்மான் பாரத் திட்டத்தின் கீழ் பலன்களைப் பெறுவது என்பது இத்திட்டத்தின் விதிகளைப் பொறுத்தே அமையும் எனக் கூறப்படுகிறது. இந்த முன்மொழிவை இதுவரைக்கும் ஈபிஎப்ஓ-ன் மத்திய அறங்காவலர் குழு அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவில்லை. தற்போதைக்கு இபிஎப் சந்தாதார்கள் ஆயுஸ்மான் பாரத் திட்டத்தின் பலன்களைப் பெற தகுதியுள்ளதா என்ற சாத்தியக்கூறுகள் ஆராயப்படுகின்றன. இது ஓய்வூதியதாரரின் பிரிவை பொறுத்தது என்கிறது மத்திய அறங்காவலர் குழு.
ஈபிஎப் சந்தாரார்கள்
"ஈபிஎப் ஓய்வூதியதாரர்கள் உள்பட அனைத்து தகுதியான நபர்களும் இத்திட்டத்தின் கீழ் பலன் பெறும் வகையில் தான் ஆயுஸ்மான் பாரத் திட்டத்தின் அம்சங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது" என்கிறார் மத்திய அறங்காவலர் குழுவின் உறுப்பினர் ப்ரஜேஷ் உபாத்யாய்.
யாருக்கெல்லாம் பயனளிக்கும்?
மாதாமாதம் ரூ. 1500 ஓய்வூதியமாகப் பெற்றுவரும் 70 முதல் 80% வரையிலான இபிஎப் ஓய்வூதியதாரர்களுக்கு மிகப்பெரிய உதவியாக ஆயுஸ்மான் பாரத் திட்டத்தின் பலன்கள் இருக்கும்.
ஆலோசனை
அடுத்தக் கூட்டத்தில், இது தொடர்பான அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாறாகத் தொழிலாளர்களுக்காக நிறுவனங்கள் செலுத்தும், தொழிலாளர் வைப்புநிதியுடன் இணைந்த காப்பீட்டு சேவையை, ஓய்வூதியதாரர்களின் பீரிமியத்தை அதிகரித்து ஆயுஸ்மான் பாரத் திட்ட பலன்களை நீட்டிக்கலாமா எனவும் ஆலோசிக்கப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈபிஎப்ஓ
ஈபிஎப் ஆணையத்தால் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிட்ட தகவலின் படி, 2017 செப்டம்பர் முதல் 2018 மார்ச் வரை புதிதாக 31.10 லட்சம் சந்தாதார்கள் அனைத்து வயது வரம்புகளிலும் சம்பளபட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர். "தற்போது வழங்கப்பட்ட தகவல்கள் தற்காலிகமானது தான். ஏனெனில் தொடர்ந்து தொழிலாளர் பதிவேடுகள் சேர்க்கப்பட்டுக் கொண்டே உள்ளன. உண்மையான எண்கள் இதை விட அதிகமாக இருக்கும்" எனப் பிஐபி கூறியுள்ளது.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications