ஈரான் மீது விதிக்கப்படும் பொருளாதாரத் தடைகள் இந்தியாவின் பொருளாதாரத்தை எந்தவிதத்திலும் பாதிக்கக்கூடாது என்று இந்தியா, அமெரிக்காவிடம் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தியுள்ளது.
இந்தியா- அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் பேச்சுவார்த்தை டெல்லியில் நேற்று நடைபெற்றது. அப்போது அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோவிடம், இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவரேஜ் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதித்தார்.
இந்தியா கோரிக்கை
இந்தியா ஒரு ஆற்றல் சார்ந்த நாடாக இருப்பதால் ஈரான் மீது விதிக்கப்படும் தடைகள் இந்தியாவைப் பாதிக்கக்கூடாது என வலியுறுத்தியுள்ளார். ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதியை உடனடியாகக் குறைத்தால் அது இந்தியப் பொருளாதாரத்தைப் பாதித்து விடும் என்று தெரிவித்த சுஷ்மா, அமெரிக்காவின் கொள்கைகள் இந்தியாவிற்குக் கேடு விளைவித்து விடக் கூடாது என்றார்.
அமெரிக்கா பதில்
இந்தியாவின் நிலைமையைப் புரிந்து கொள்ள முடிவதாகத் தெரிவித்த பாம்பியோ, இந்தியாவின் பொருளாதாரத்தைச் சீர்குலைக்க வேண்டும் என்ற எண்ணம் அமெரிக்காவுக்கு இல்லை என்று தெரிவித்தார். அதேநேரம் கொள்கைகளில் நீண்டகாலம் சமரசம் செய்து கொள்ள முடியாது என்று கூறியுள்ளார்.
மீறினால் பொருளாதாரத் தடை
நவம்பர் 4 ஆம் தேதி ஈரானிய கச்சா எண்ணெய் மீது தடை விதிக்கப்படுவது குறித்து அனைத்து நாடுகளின் கவனத்துக்கு எடுத்துச் சென்றுள்ளோம். அதேபோல் இந்தியாவுக்கும் இந்தத் தகவலை கூற கடமைப்பட்டுள்ளோம். நவம்பர் 4 ஆம் தேதிக்குப் பிறகு ஒவ்வொரு நாடும் ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதியை முழுமையாகக் கைவிட வேண்டும் எதிர்பார்ப்பதாகக் கூறிய பாம்பியோ, தவறினால் அத்துமீறிய நாடுகள் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் எனக் கூறினார்.
விளக்கம்
ஈரானின் தவறான அணுகுமுறைக்குப் பாடம் கற்பிக்கவே பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படுவதாகப் பாம்பியோ விளக்கம் அளித்தார். அமெரிக்காவிடம் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதி செய்ய இந்தியா ஏற்கனவே ஒப்புக் கொண்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
More From GoodReturns

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

இதை தான் ஒரு வாரமாக அட்டாக் பண்றாங்களா? ஈரான் போரில் நடப்பது என்ன? அமெரிக்கா, இஸ்ரேல் சொல்வது பொய்யா?

படுகொலை செய்யப்பட்ட ஈரான் தலைவர் கமேனியின் இறுதி ஊர்வலம் ஒத்தி வைப்பு: காரணம் என்ன?

ஈரான் போர்: பல ஆயிரம் கோடிகளை இழந்த இந்திய விமான நிறுவனங்கள்!! நிலைமை இன்னும் மோசமடையுமா?

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

துபாய், சவுதி வாழ் இந்தியர்களுக்கு மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!! இந்த நம்பரை சேவ் பண்ணிக்கோங்க!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்கிறதா? கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு மத்தியில் முக்கிய அப்டேட்

துபாய் வாழ் இந்தியர்களே வீட்டை விட்டு வெளியேறினால் நடவடிக்கை: ஈரான் தாக்குதலுக்கு மத்தியில் எச்சரிக்கை

ஈரான் போர் நீடிப்பதால் மனம் மாறிய அமெரிக்கா!! திடீரென இந்தியாவுக்கு சலுகை!!

கத்தார் வாழ் இந்தியர்களே கவனம்!! வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என எச்சரிக்கை!! #Iranwar



Click it and Unblock the Notifications