விநாயகர் சதுர்த்தித் தென் இந்தியாவை விட வட இந்தியாவில் மிகவும் கோலகலமாகக் கொண்டாடுவர்கல். அதிலும் எங்கு மிகவும் விலை உயர்ந்த விநாயகர் சிலை உருவாக்கப்பட்டது என்ற போட்டியும் நிலவும்
இப்படி இந்த ஆண்டு மும்பையில் மிகவும் விலை உயர்ந்த விநாயகர் சிலை ஒன்று சரஸ்வத் பிராமின் கணேஷ் மண்டல் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விநாயகர் சிலைக்கு 264.75 கோடி ரூபாக்கு காப்பீடு பெற்றுள்ளனர்.
இந்த விநாயகர் சிலைக்கு என்ன சிறப்பு?
சரஸ்வத் பிராமின் கணேஷ் மண்டல் அமைத்துள்ள இந்த விலை உயர்ந்த விநாயகர் சிலையை 14.5 அடி உயரத்தில் 68 கிலோ தங்கம் மற்றும் 327 கிலோ வெள்ளி மற்றும் வரை நகைகளை எல்லாம் பயன்படுத்தி அலங்காரம் செய்து வடிவமைத்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் சரஸ்வத் பிராமின் கணேஷ் மண்டல் சிலை இப்படி மிகப் பிரம்மாண்டமாக உருவாக்கப்படுவது வழக்கம்.
காப்பீடு
விநாயகர் சதுர்த்தி வியாழக்கிழமை நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. எனவே இந்த விலை உயர்ந்த சிலையுடனான கொண்டாட்டத்தினைச் சிறப்பிக்க ஒரு நாளைக்கு 52.85 கோடி ரூபாய்க்குக் காப்பீடு செய்துள்ளனர்.
யாருக்கெல்லாம் இந்தக் காப்பீடு கிடைக்கும்?
விலை உயர்ந்த விநாயகர், தரிசிக்க வரும் பக்தர்கள், ஆபரணங்கள் ,விபத்து, தீவிரவாதம், தீ போன்ற எதிர்பாரா விபத்துகள் நடைபெறும் போது காப்பீடு பெறக்கூடிய பாலிசியாக இது அமைந்திருக்கிறது.
விபத்து நிகழும் போது தனிநபர் விபத்துகளுக்கு ரூ. 224.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் தொண்டர்கள் மற்றும் தொழிலாளர்கள் உட்படத் தனி நபர் ஒருவருக்கு ரூ. 10 லட்சம் வரை காப்பீடு கிடைக்கும். சிசிடிவி, தளபாடங்கள் மற்றும் சாதனங்கள், மளிகை, பழங்கள், காய்கறிகள் மற்றும் கணினிகள், தீ, இயற்கைப் பேரழிவுகள், கலவரங்கள், வேலைநிறுத்தம், இரயில் அல்லது சாலை சேதங்கள், மின்சாரம், பூகம்பங்கள் ஆகியவற்றால் பாதிப்படையும் போது இந்தக் காப்பீடு இழப்பினை அளிக்கும்.
இந்தக் காப்பீட்டிற்கான கால அளவு எவ்வளவு?
விநாயகர் சதுர்த்தி நாள் முதல் சிலைக்குச் சாத்தப்பட்டுள்ள நகைகள் எல்லாம் வங்கி லாக்கரில் மீண்டு பாதுகாப்பாக டெபாசிட் செய்யப்படும் வரை இந்தக் காப்பிடு கவர் செய்யும்.
பிற விநாயகர் சிலை விலை நிலவரம்
மகாராஷ்டிரா முழுவதும் இந்த ஆண்டு 3 லட்சத்திற்கு மேற்பட்ட விநாயகர் சிலைகளை அமைக்க உள்ளனர் என்று தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றனர். இவ்வற்றில் 1.5 லட்சத்திற்கும் மேற்பட்டவை 5 லட்சம் முதல் 50 லட்சம் லட்சம் மதிப்பிலான விநாயகர் சிலைகள் ஆகும்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications