மத்திய அரசு திங்கட்கிழமை பொதுத் துறை வங்கி நிறுவனங்களான பாங்க் ஆப் பரோடா, தேனா வங்கி மற்றும் விஜயா வங்கி உள்ளிட்டவற்றை இணைப்பதை இருப்பதாக அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பானது சென்ற ஆண்டுப் பொதுத் துறை வங்கிகளை இணைப்பதற்காக உருவாக்கப்பட்ட 'மாற்று வழிமுறை' குழுவின் இன்றைய கூட்டத்திற்குப் பிறகு அறிவித்துள்ளனர்.
பாங்க் ஆப் பரோடா, தேனா வங்கி மற்றும் விஜயா வங்கிகள் இனைவதற்கான திட்டத்தினை அந்தந்த வங்கிகளின் போர்டு உறுப்பினர்கள் வெற்றிகரமாக நிறைவேற்றும் போது இந்த வங்கிகள் இனைவானது சாத்தியமாகும்.
எஸ்பிஐ
2017-ம் ஆண்டு எஸ்பிஐ வங்கி அதன் துணை வங்கிகளுடன் இணைந்த பிறகு நடைபெற இருக்கும் முக்கிய வங்கிகள் இணைவாகப் பார்க்கப்படுகிறது. எஸ்பிஐ வங்கி அதன் துணை வங்கிகளுடன் இணைந்த பிறகு அது மிகப் பெரிய பலனை அளித்துள்ளதாகவும் அதனைப் பிற பொதுத் துறை வங்கிகளிலும் செய்ய உள்ளதாகவும் நிதி அமைச்சக வட்டாரங்கள் கூறுகின்றன.
மூன்றாம் மிகப் பெரிய வங்கி நிறுவனம்
பாங்க் ஆப் பரோடா, தேனா வங்கி மற்றும் விஜயா வங்கிகள் இணைந்தால் இந்தியாவின் மூன்றாம் மிகப் பெரிய வங்கி நிறுவனமாக இது இருக்கும் தமிழ் நிதி சேவைகள் துறை செயலாளரான ராஜிவ் குமார் தெரிவித்துள்ளார்.
எதிர்ப்பு
மத்திய அரசு பொதுத் துறை வங்கிகளை இணைப்பதில் தீவிரம் காட்டி வரும் நிலையில் வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்கள் அதனைக் கடுமையாக எதிர்த்து வருகின்றன.
வாரா கடன்
பொதுத் துறை வங்கிகள் ஏற்கனவே வாரா கடனில் சிக்கித் தவித்து வரும் நிலையில் அதனைச் சரி செய்ய மத்திய நிதி அமைச்சகம் மறு மூலதனம் அளித்து வருகிறது. அது மட்டும் இல்லாமல் இந்த இணைவின் மூலம் வங்கிகளுக்குத் தேவைப்படும் மூலதனம் குறையும் என்று மத்திய அரசு எதிர்பார்க்கிறது.
ஐடிபிஐ வங்கி
மறு பக்கம் ஐடிபிஐ வங்கியின் பெரும்பான்மையான பங்குகள் எல்ஐசி வாங்க உறுதி அளித்தது மட்டும் இல்லாமல் முதற்கட்ட பரிவர்த்தனையினை முதற்கட்டமாகச் செய்துள்ளது. தனித்தனியாக இருக்கும் வங்கிகளை இணைப்பதன் மூலம் அவற்றுக்கு உள்ள பலவீனம் குறையும் என்றும் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications