தமிழ் நாடு அரசு ஊழியர்களுக்கு நற்செய்தி.. அகவிலைப்படி 2% உயர்வு..!

தமிழ் நாடு அரசு திங்கட்கிழமை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதார்கள் போன்றவர்களுக்கு அகவிலைப்படியை 2 சதவீதம் உயர்த்தி அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த அரசாணையில் அரசு ஊழியர்களுக்குத் தற்போது வழங்கி வரும் அகவிலைப்படியை 7 சதவீதத்தில் இருந்து 9 சதவீதமாக உயர்த்துவதாகக் குறிப்பிட்டுள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மத்திய அரசு

மத்திய அரசு

மத்திய அரசு அன்மையில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியினை 2 சதவீதமாக உயர்த்தி 2018 ஜூலை மாதம் முதல் வழங்க இருப்பதாக அறிவித்ததினை அடுத்து தமிழக அரசு இந்த முடிவினை எடுத்துள்ளது.

 எப்போது முதல் அகவிலைப்படி கிடைக்கும்?

எப்போது முதல் அகவிலைப்படி கிடைக்கும்?

தமிழ் நாடு அரசும் ஊழியர்களுக்கு அளித்துள்ள இந்த அகவிலைப்படி உயர்வினை 2018 ஜூலை மாதம் முதலே கணக்கிட்டு அளிக்கும். இதனால் 18 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதார்கள் பயனடைவார்கள்.

எவ்வளவு கூடுதல் சம்பளம் கிடைக்கும்?

எவ்வளவு கூடுதல் சம்பளம் கிடைக்கும்?

தமிழக அரசு எடுத்துள்ள இந்த முடிவினால் ஊழியர்களின் மாத சம்பளம் 314 ரூபாய் முதல் 4,500 ரூபாய் வரை உயரும். ஓய்வூதியதார்கள் 157 ரூபாய் முதல் 2,250 ரூபாய் வரை கூடுதலாகப் பெறுவார்கள்.

அகவிலைப்படி என்றால் என்ன?

அகவிலைப்படி என்றால் என்ன?

பணவீக்கத்தால் செலவுகள் அதிகரிக்கும் போது அதனைக் கட்டுப்படுத்த அகவிலைப்படியை உயர்த்தி அளித்து அதனைக் குறைப்பதே அகவிலைப்படியாகும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+