மத்திய அரசு பாங்க் ஆப் பரோடா, விஜயா வங்கி மற்றும் தேனா வங்கிகளை இணைத்த பிறகு அவற்றின் பெயரினை மாற்றுவது குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
மூன்று வங்கிகளின் பெயரையும் மாற்ற உள்ளதாகவும் இதனால் பழைய பிராண்டு மதிப்புடன் புதிய அடையாளமும் இந்த வங்கிகளுக்குக் கிடைக்கும் என்று நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
பாங்க் ஆப் பரோடா
பெயர் மாற்றம் குறித்துப் பாங்க் ஆப் பரோடா வங்கியின் மூத்த அதிகாரி ஒருவரைத் தொடர்பு கொண்டு கேட்ட போது இரண்டு வங்கிகளுடன் இணைந்துகொண்டு தனித்தனி பெயர் மற்றும் லோகோவுடன் செயல்பட்டால் நன்றாக இருக்கும் என்றும் நாங்கள் மிகப் பெரிய பிராண்டு என்றும் அவர்களுக்கும் வங்கி துறையில் வாடிக்கையாளர் மத்தியில் சிறந்த பெயர் உள்ளது என்றும் குறிப்பிட்டார்.
விஜயா வங்கி
இதையே விஜயா வங்கி அதிகாரியிடம் கேட்ட போது 1931-ம் ஆண்டு முதல் விஜயா வங்கி செயல்பட்டு வருகிறது. வாடிக்கையாளர்கள் மத்தியில் சிறந்த நன்மதிப்பையும் கொண்டுள்ளது. எனவே பழைய பிராடு பெயரினையே மூன்று வங்கிகளும் தொடர்வது நல்லது. இது போன்று ஏற்கனவே இந்துஸ்தான பெட்ரோலியம் காப்ரேஷன் லிமிட்டட் மற்றும் ஓஎன்ஜிசி நிறுவனங்கள் சென்ற ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
ஆர்பிஐ
ஆனால் வங்கி துறையில் இது சாத்தியமில்லை. வங்கிகள் ஒழுங்கு முறை ஆணையமாக உள்ள ஆர்பிஐ இதனை ஏற்காது என்று தகவல்கள் கூறுகின்றன. அதே நேரம் யூடிஐ வங்கி -ஆக்சிஸ் வங்கி இரண்டும் வெவ்வேறு பெயரில் செயல்பட்டு வருகிறது என்றும் கூறுகின்றனர்.
புதிய பெயர்
மூன்று வங்கிகளும் இணைந்த பிறகு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா போன்று நேஷ்னல் பாங்க் ஆப் இந்திய என்ற பெயரினை பெற அதிக வாய்ப்புகள் உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
மத்திய அரசு
பாங்க் ஆப் பரோடா, விஜயா வங்கி மற்றும் தேனா வங்கிகளை மத்திய அரசு இணைப்பதாகவும் அதனால் இந்தியாவின் மூன்றாம் மிகப் பெரிய வங்கி நிறுவனமாக இது உருவெடுக்கும் என்றும் தெரிவித்தனர். அது மட்டும் இல்லாமல் இந்த நிறுவனங்களின் வங்கி சேவை மேலும் விரிவடையும் என்றும் குறைந்த மதிப்பிலான டெபாசிட் மற்றும் மானியங்கள் எல்லாம் கிடைக்கும் எனவும் கூறுகின்றனர்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications