ஸ்வீடஷை சேர்ந்த ஃபர்னிச்சர் நிறுவனமான ஐகியா இந்தியாவின் முதல் ஷோரூமை ஹைதராபாத்தில் அன்மையில் துவங்கியது. மேலும் அதில் ஒரே நேரத்தில் 1,000 நபர்கள் அமர்ந்து உணவு எடுத்துக்கொள்ளும் ரெஸ்டாரண்ட்டையும் அமைத்தது.
ரெஸ்டாரண்ட் துவங்கப்பட்ட சில வாரங்களில் அதில் புழு இருந்ததாக டிவிட்டரில் புகார் வந்தது. தற்போது கேக்கில் வண்டு இருந்ததாகப் புகார் எழுந்துள்ளது.
மன்னிப்பு
பிரியாணியில் புழு இருந்ததாகச் செய்திகள் வெளியான உடன் அதற்கு வாடிக்கையாளரிடம் நேரடியாக மன்னிப்பு கேட்ட ஐகியா தற்போது கேக் பிரச்சனைக்கும் மன்னிப்பைக் கேட்டுள்ளது.
அபராதம்
கேக்கில் வண்டு இருப்பதாக டிவிட்டரில் புகார் எழுந்த உடன் ஹைதராபாத் முனிசிபல் கார்ப்ரேஷன் ஐகியா இந்தியா நிறுவனம் மீது 5,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது. இதுவே பிரியாணியில் புழு இருந்த போது 11,500 ரூபாய் அபராதம் விதித்தது.
ஆய்வு
ஹைதராபாத் கிரேட்டர் முனிசிப்பல் கார்ப்ரேஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில் புகார் எழுந்த இந்தக் கேக்கினை முழுமையாக ஆய்வுக்கு அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
தடை
பிரியாணியில் புழு இருந்ததாகக் கூறப்பட்ட நிலையில் அதனை ஐகியாவிற்கு விநியோகம் செய்த நாக்பூரை சேர்ந்த ஹல்திராம்ஸ் நிறுவனம் மீதும் ஹைதரபாத் முனிசிப்பல் கார்ப்ரேஷன் அபராதம் வித்துள்ளது. அது மட்டும் இல்லாமல் ஐகியாவில் பிரியாணி மற்றும் சமோசாவை விற்க தடையும் வித்து இருந்த நிலையில் கேக் விவகாரத்தில் என்ன செய்யும் என்று பொருத்து இருந்து பார்ப்போம்.