ரோபாக்கள், செயற்கை நுண்ணறிவு, ஆட்டோமேஷன் போன்றவை வருகையால் உலகம் முழுவதும் வேலை வாய்ப்பு இழப்புகள் அதிகரிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில் அன்மை ஆய்வு முடிவுகள் ஆச்சர்யத்தினை அளிக்கின்றன என்று உலகப் பொருளாதார ஃபோரம் தெரிவித்துள்ளது.
ஸ்விஸ் திங்க் டாங்க்
ஸ்விஸ் திங்க் டாங்க் ரோபோக்களால் 2022-ம் ஆண்டுக்குள் 75 மில்லியன் வேலை வாய்ப்புகள் இழப்பு ஏற்படும் என்றும், அதே நேரம் 133 மில்லியன் வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று தெரிவித்துள்ளது.
புதிய வேலை வாய்ப்புகள்
புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கினாலும், அவை வேலை வாய்ப்பினை இழப்பவர்களுக்கு அவை கிடைக்குமா என்பது சந்தேகமே ஆகும்.
ரோபோக்கள்
தற்போது உள்ள வேலை வாய்ப்புகளை நீக்கி அவர்களின் உற்பத்தியினை அளிக்க ரோபோக்கள் மற்றும் அல்காரிதம்கள் பெரிய அளவில் மாற வேண்டும் என்று டேவோஸ் நெட்வொர்க் நிகழ்வில் தெரிவித்துள்ளனர்.
வேலை வாய்ப்பு இழப்பு
முதல் மூன்று தொழில் புரட்சியில் இருந்ததை விட 4-ம் தொழில் புரட்சியில் மிகப் பெரிய வேலை வாய்ப்பு இழப்பினை ஏற்படுத்தும் என்று பாங்க் ஆப் இங்கிலாந்தின் பொருளாதார நிபுணரான ஆண்டி ஹால்டேன் ஆகஸ்ட் மாதம் தெரிவித்து இருந்தார்.