அமெரிக்க விமானத் தயாரிப்பு நிறுவனமான போயிங் அதன் இரண்டாம் மிகப் பெரிய எலக்டானிக்ஸ் உற்பத்தி ஆலையினை 1,152 கோடி ரூபாய் செலவில் பெங்களூருவில் அமைக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
இதற்காகக் கர்நாடகா மாநில தொழிற் துறை வடக்குப் பெங்களூருவில் உள்ள தேவனஹலியில் 36 ஏக்கர் நிலப்பரப்பினை ஒதுக்கி அளித்துள்ளது. இதற்காகப் போய்ங் நிறுவனத்தின் இந்திய தலைவரான பரத்யூஷ் குமாரும் கர்நாடக முதல்வர் எச் டி குமாரசாமியைச் சந்தித்துப் பேச்சு வார்த்தையினை நடத்தியுள்ளார்.
வேலை வய்ப்புகள்
பெங்களூருவில் அமைய உள்ள போயிங் நிறுவனத்தின் இஞ்சினியரிங் மற்றும் டெக்னாலஜி மையத்தின் கீழ் 2,600 புதிய வேலைப்புகள் உருவாக உள்ளது என்றும் அதிகாரப்பூர்வமான தகவல்கள் கூறுகின்றன.
அனுமதி
சித்தராமையா கர்நாடகா முதல்வராக இருந்த போதே 2017-ம் ஆண்டுப் போயிங் நிறுவனத்திற்கான முதலீட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டதாகவும் ஆனால் அதில் இருந்த சில சட்ட சிக்கல்களுக்குத் தீர்வு கிடைத்து அனுமதி அளிப்பதற்குள் ஆட்சி மாற்றம் நடைபெற்றது. ஆனால் இதுவும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியே ஆகும்.
இரண்டாம் மிகப் பெரிய தொழிற்சாலை
போயிங் நிறுவனத்தின் வாஷ்ங்டன் தொழிற்சாலைக்கு அடுத்துப் பெங்களூருவில் அமைய உள்ள இது தான் மிகப் பெரியது என்று தெரிவித்துள்ளனர். போயிங்கின் திட்டத்திற்குச் சென்ற மாதமே அனுமதி அளித்த நிலையில் தற்போது இடம் ஒதுக்குவதற்கான பணிகள் முழுமையாக முடிவடைந்து ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தயாரிப்பு
போயிங் நிறுவனம் அடுத்த மூன்று மாதத்தில் தொழிற்சாலைகளுக்கான பணிகளை முடித்து 2019-ம் ஆண்டில் முதல் பிரிவினை தொடங்க உள்ளது. இங்கு இருந்து விமானத்திற்குத் தேவையான பல உதிரிப்பாகங்களையும் தயாரிக்க உள்ளனர்.