அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு கடந்த சில வாரங்களாக மிகப் பெரிய அளவில் சரிந்த நிலையில் என்ஆர்ஐ-கள் மிகப் பெரிய அளவில் பயன் அடைந்துள்ளனர்.
அது மட்டும் இல்லாமல் கட்டுமான பொருட்கள் விலை உயர்வால் மந்தமாக இருந்து வந்த ரிலியல் எஸ்டேட் துறையும் சூடு பிடித்துள்ளது.
ரூபாய் மதிப்புச் சரிவு
2018-ம் ஆண்டில் இதுவரை டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 13.04 சதவீதம் வரை சரிந்துள்ளது. அதில் கடந்த மூன்று மாதத்தில் மட்டும் 3.4 சதவீத சரிவினை ரூபாய் மதிப்புச் சந்தித்தது. அது மட்டும் இல்லாமல் ஆசிய நாணயங்களில் மிக மோசமாக சரிந்த நாணய பட்டியலிலும் சேர்க்கப்பட்டது.
ரியல் எஸ்டேட்
மறுபக்கம் 2016-ம் ஆண்டு முதல் ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை ஆணையத்தில் ஏற்பட்ட புதிய மாற்றங்கள், சரக்கு மற்றும் சேவை வரி மலுக்கு வந்தது, பினாமி சொத்துச் சட்டம் போன்றவற்றால் வெளிப்படைத் தன்மை அதிகரித்து இருப்பது என்ஆர்ஐ மத்தியில் பெறும் வரவேற்பினை பெற்றுள்ளது.
அந்நிய செலாவணி
இந்நிலையில் ரூபாய் மதிப்பு சரிந்த உடன் வெளிநாட்டில் உள்ள இந்தியர்கள் அந்நிய செலாவணியைப் பெறும் அளவில் இந்தியாவில் குவித்தது மட்டும் இல்லாமல் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடுகளை அதிகரித்துள்ளனர் என்று தரவுகள் கூறுகின்றன.
என்ஆர்ஐ
பொதுவாக என்ஆர்ஐகள் அதிகளவில் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்ய விரும்புவார்கள். இதற்கு முன்பு ரூபாய் மதிப்பு 2012-ம் ஆண்டு மிகப் பெரிய அளவில் சரிந்த போது 10 சதவீதமாக என்ஆர்ஐ-களின் ரியல் எஸ்டேட் முதலீடு 25 சதவீதம் வரை அதிகரித்து இருந்தது.
மீண்டும்
அதே போன்ற ஒரு நிலை தற்போதும் உருவாகியுள்ளது. கடந்த சில மாதங்களாக என்ஆர்ஐகளின் ரியல் எஸ்டேட் முதலீடு மீண்டும் 10 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக அதிகரித்துள்ளது. எனவே ரியல் எஸ்டேட் முதலாளிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
என்ஆர்ஐ-களைக் கவரும் ரியல் எஸ்டேட் சந்தை
என்ஆர்ஐ-களைப் பெரிதும் கவர்ந்த சொத்து சந்தை என்றால் அவை சென்னை, பெங்களூரு, கொச்சி, சண்டிகர், புனே, மும்பை மற்றும் அகமதாபாத் உள்ளிட்ட நகரங்களே ஆகும். இந்நிலையில் ரூபாய் மதிப்புச் சரிவு இவர்களுக்கு மிகப் பெரிய ஜாக்பாட்டாக அமைந்துள்ளது.