ஆதார் கார்டு குறித்த முக்கியத் தீர்ப்பினை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான நீதிபதிகள் வழங்கிய நிலையில் சில வற்றுக்கு ஆதார் கட்டாயம் என்றும், பலவற்று தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி மொபைல் எண், வங்கி கணக்கு உள்ளிட்டவற்றுக்கு அதார் என் தேவையில்லை என்றும், பான் கார்டு, வருமான வரி போன்றவற்றுக்குக் கட்டாயம் என்றும் தெரிவித்துள்ளனர். எனவே உச்ச நீதிமன்ற தீர்ப்பினை அடுத்து ஆதார் எதற்கெல்லாம் கட்டாயம்? எங்கு எல்லாம் தேவையில்லை? என்று இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.
பான் கார்டு
பான் கார்டுகளில் டூப்ளிகேட்கள் உள்ள நிலையில் 12 இலக்க ஆதார் எண்ணை பயன்படுத்தி இணைக்கும் போது ஒருவருக்கு ஒரு பான் கார்டு என்ற நிலை உருவாகும். எனவே பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது கட்டாயம் என உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
வருமான வரி
வருமான வரி செலுத்த ஆதார் எண் கட்டாயம் என்றும் தற்போது உள்ள விதிகள் அப்படியே தொடரும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அரசு மானியங்கள்
ஆதார் சட்டப்பிரிவு 7-ன் கீழ் அரசு நல திடங்கள், மானியங்கள் உள்ளிட்டவற்றைப் பெற ஆதார் எண் கட்டாயம் ஆகும்.
வங்கி கணக்கு
வங்கி கணக்கு துவங்க ஆதார் கட்டாயம் என்ற விதிகளை உச்ச நீதிமன்றம் நீக்கியது. எனவே வங்கி வாடிக்கையாளர்கள் சேமிப்பு கணக்குடன் வங்கி கணக்குகளை இணைக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
மொபைல் எண்
மொபைல் சிம் கார்டுகளுக்கு ஆதார் கட்டாயம் என்ற டெலிகாம் துறையின் அறிவிப்பு அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
தனியார் நிறுவனங்கள்
தனியார் நிறுவனங்களுக்கு ஆதார் தரவுகளைப் பயன்படுத்த அனுமதி அளித்து இருந்த விதியை ரத்து செய்த நீதிபதிகள் 6 மாதங்களுக்கு மேல் தனியார் நிறுவனங்கள் ஆதார் அங்கீகார தரவை சேமித்து வைக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளனர்.
பள்ளிகள்
பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்க ஆதார் கட்டாயம் இல்லை என்றும், நீட், சிபிஎஸ்ஈ உள்ளிட்ட தேர்வுகளுக்கும் அதார் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
ஆதார் செல்லும்
அரசியல் சாசன விதிகளின் படி ஆதார் செல்லும். ஆனால் தனிநபர் உரிமைகளைப் பாதிக்கக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications